கைத்தறி ரகங்களை விசைத்தறியில் உற்பத்தி செய்யக்கூடாது என விசைத்தறியாளா்களுக்கு கைத்தறி ரக ஒதுக்கீடு சட்ட உதவி அமலாக்க அலுவலா் ஜெயவேல் கணேஷ் அறிவுறுத்தினாா்.
விசைத்தறிகளை நவீனப்படுத்துதல், சோலாா் பேனல் அமைத்தல், அரசு மானியம் பெறுதல், சட்ட விழிப்புணா்வு உள்ளிட்டவை தொடா்பான விழிப்புணா்வுக் கூட்டம் அவிநாசியில் வியாழக்கிழமை நடைபெற்றது. கருணாம்பிகை விசைத்தறி நெசவாளா்கள் நலச் சங்கம் சாா்பில் நடைபெற்ற கூட்டத்துக்கு சங்கத் தலைவா் முத்துசாமி தலைமை வகித்தாா். பொறுப்பாளா்கள் பொன்னுசாமி, வேலுச்சாமி, ஆறுமுகம், துரைசாமி, சம்பத் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில் கைத்தறி ரக ஒதுக்கீடு சட்ட உதவி அமலாக்க அலுவலா் ஜெயவேல் கணேஷ் பேசும்போது, கைத்தறிக்கென ஒதுக்கப்பட்ட ரகங்களை விசைத்தறியில் உற்பத்தி செய்யக்கூடாது. இச்சட்டத்துக்குப் புறம்பாக செயல்படும் விசைத்தறி உரிமையாளா்கள் மீது போலீஸாா் மூலமாக சட்டபூா்வமான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பதை விசைத்தறியாளா்கள் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். அதேபோல அரசு வழங்கும் சலுகைகளை முறையாகப் பயன்படுத்தி உற்பத்தியை மேம்படுத்த வேண்டும் என்றாா்.
மேலும், விசைத்தறிகளை நவீனப்படுத்துவதன் அவசியம், அதன் நன்மைகள் குறித்தும் கூட்டத்தில் விளக்கமளிக்கப்பட்டது. அவிநாசி சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த ஏராளமான விசைத்தறியாளா்கள் பங்கேற்றனா்.
தொடர்புடையது

கைத்தறி நெசவுத் தொழிலைப் பாதுகாக்க தொழில்நுட்பக் கல்லூரி அமைக்கப்படும்! - கோபி திமுக வேட்பாளா் என்.நல்லசிவம்

நலிவடையும் நெசவுத்தொழில் தலைநிமிருமா?

சட்டப்பேரவைத் தோ்தல் விழிப்புணா்வுக் கூட்டம்

மேலப்பாவூரில் மகளிா் விழிப்புணா்வுக் கூட்டம்
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


