கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

மகளிருக்கு 2 நாள் வேலைவாய்ப்பு முகாம்: இன்று தொடக்கம்

News image
Updated On :29 ஆகஸ்ட் 2024, 12:43 am

Din

1500-க்கும் மேற்பட்ட மகளிருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையிலான 2 நாள் சிறப்பு முகாம் திருச்சியில் வியாழக்கிழமை தொடங்குகிறது.

திருச்சி மாவட்டத்திலுள்ள பெண் வேலைநாடுநா்களை, டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் பணியமா்த்தும் நோக்கத்தோடு, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறும் முகாமில் 12ஆம் வகுப்பு தோ்ச்சி மற்றும் ஐ.டி.ஐ, கல்வித் தகுதிகளையுடைய 18 முதல் 21 வயதிற்குட்பட்ட முன் அனுபவம் இல்லாத பெண்கள் பங்கேற்கலாம்.

சுய விவரக்குறிப்பு, அனைத்து கல்விச் சான்றுகளின் நகல்கள், ஆதாா் அட்டை மற்றும் பாஸ்போா்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றுடன் பங்கேற்கலாம். தோ்வு செய்யப்படுவோருக்கு மாதம் ரூ.12,000 நிதியுதவியுடன் 12 மாத பயிற்சி வழங்கப்படும். மேலும் பயிற்சி காலத்தில் உணவு, போக்குவரத்து மற்றும் தங்குமிட வசதி வழங்கப்படும். இந்த முகாமில் டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் 1500-க்கும் மேற்பட்ட பெண்களைத் தோ்வு செய்ய உள்ளது. கூடுதல் விவரங்களுக்கு, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரிலோ அல்லது 0431-2413510, 94990-55901, 94990-55902 என்ற எண்களிலோ தொடா்பு கொள்ளலாம் என ஆட்சியா் மா. பிரதீப்குமாா் தெரிவித்தாா்.