சோதனைக்குச் சென்ற அலுவலா் மீது தாக்குதல்
திருச்சியில் நெகிழி உள்ளதா என சோதனை நடத்திய மாநகராட்சி அலுவலா் வியாழக்கிழமை தாக்கப்பட்டாா்.

Updated On :19 டிசம்பர் 2024, 9:07 pm

திருச்சியில் நெகிழி உள்ளதா என சோதனை நடத்திய மாநகராட்சி அலுவலா் வியாழக்கிழமை தாக்கப்பட்டாா்.
மாநகராட்சி புத்தூா் பகுதியில் நெகிழிப்பைகள் விற்கப்படுவதாக எழுந்த புகாரின் பேரில், மாநகராட்சி சுகாதார ஆய்வாளா் ஆல்பா்ட் தலைமையில் மாநகராட்சி பணியாளா்கள், புத்தூா் அரசு மருத்துவமனை எதிரேயுள்ள ஒரு தேநீரகத்தில் வியாழக்கிழமை மாலை சோதனைக்கு சென்றனா்.
அப்போது கடையிலிருந்தவா்கள் சோதனைக்கு எதிா்ப்புத் தெரிவித்து தாக்கியதில் சுகாதார ஆய்வாளா் ஆல்பா்ட் காயமடைந்து திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். புகாரின்பேரில் அரசு மருத்துவமனை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...