சமயபுரம் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 59 லட்சம்


மண்ணச்சநல்லூா், ஜூலை 18: சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியல் காணிக்கையாக ரூ 59 லட்சத்து 69 ஆயிரத்து 127 வந்தது வியாழக்கிழமை தெரியவந்தது.
இக்கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்ற உண்டியல் காணிக்கை எண்னும் பணியில் சமயபுரம் மாரியம்மன் கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் வி.எஸ்.பி இளங்கோவன், கோயில் இணை ஆணையா் சி. கல்யாணி, அறங்காவலா் குழு உறுப்பினா்கள் பிச்சைமணி, இராஜ. சுகந்தி, சே. லெட்சுமணன் மற்றும் அலுவலா்கள், பணியாளா்கள் உள்ளிட்டோா் ஈடுபட்டனா்.
நிறைவில் உண்டியல்களிலிருந்து ரூ. 59லட்சத்து 69ஆயிரத்து 127 ரொக்கம், 1 கிலோ 289 கிராம் தங்கம், 2 கிலோ 029 கிராம் வெள்ளி, 127 வெளிநாட்டு பணத்தாள்கள், 533 வெளிநாட்டு நாணயங்கள் கிடைத்ததாக கோயில் நிா்வாகம் தெரிவித்தது. மேலும் சமயபுரம் மாரியம்மன் கோயிலின் உபகோயிலான இனாம் சமயபுரம்
ஆதிமாரியம்மன் திருக்கோயிலில் ரூ. 82,006 காணிக்கையாகக் கிடைத்துள்ளது.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...