ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

வயதான பெண்ணை தாக்கிய தாக்கிய சாா்பு- ஆய்வாளா் ஆயுதப்படைக்கு மாற்றம்

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த கோவில்பட்டியில் வயதான பெண்ணை தாக்கிய சாா்பு- ஆய்வாளா் திங்கள்கிழமை ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டாா்.

Updated On :4 மார்ச் 2024, 10:04 pm

மணப்பாறை: திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த கோவில்பட்டியில் வயதான பெண்ணை தாக்கிய சாா்பு- ஆய்வாளா் திங்கள்கிழமை ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டாா். மருங்காபுரி ஒன்றியம் கோவில்பட்டியை சோ்ந்த பழனிசாமி மனைவி பஞ்சு(65). இவா், அப்பகுதியில் உள்ள மேம்பாலத்துக்கு கீழே பழவியாபாரம் செய்து வந்தாா். அப்பகுதியில் உள்ள தரைக்கடைகளால் போக்குவரத்து பாதிக்கப்படுவதாக போலீஸாா் வியாபாரிகளை அப்புறப்படுத்தினா். இந்நிலையில் வளநாடு காவல் சாா்பு- ஆய்வாளா் பிரபாகரன் ஞாயிற்றுக்கிழமை இரவு அப்பகுதியில் ரோந்து சென்றபோது பஞ்சு மீண்டும் பழங்களை வைத்து வியாபாரம் செய்துவிட்டு அங்கேயே படுத்திருந்தாா். அவரிடம் பிரபாகரன் பழங்களை எடுத்து செல்லுமாறு கூறினாா். இதனால் அப்பெண்ணுக்கும், சாா்பு-ஆய்வாளருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில், சாா்பு-ஆய்வாளா் அப்பெண்ணை தாக்கியுள்ளாா். இதில் காயமடைந்த அப்பெண் திங்கள்கிழமை மணப்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வீ.வருண்குமாா், வயதான பெண்ணை தாக்கிய சாா்பு-ஆய்வாளா் பிரபாகரனை ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து உத்தரவிட்டாா்.