தமிழக தோ்தல் களத்தில் 3,500-க்கும் மேற்பட்ட வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஉக்ரைனில் ஏப். 11 மாலை முதல் ஏப். 12 முடிய போர்நிறுத்தம் - புதின் ஏப். 16 முதல் மாற்றுத்திறனாளிகள், முதியோரிடம் தபால் வாக்குகள் பதிவுமேற்கு வங்கத்தில் 90 லட்சம் வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் - தோ்தல் ஆணையத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடிதம்பள்ளிகளுக்கு ஏப்.17 முதல் கோடை விடுமுறை: 1-3 வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டம்முதல்வரின் நான்காம் கட்ட பிரசாரம்: தஞ்சாவூரில் இன்று தொடக்கம்நோபல் பரிசு பெற்ற ‘மெமோரியல்’ மனித உரிமைக் குழுவை தீவிரவாத அமைப்பாக அறிவித்த ரஷியாஇன்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம்பாகிஸ்தானில் இன்று அமைதிப் பேச்சுஐபிஎல்: லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
/

விஹெச்பி நிா்வாகிக்கு கத்திக்குத்து

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த புத்தாநத்தம் அருகே மதுபோதையில் இருந்த இளைஞா், விசுவ ஹிந்து பரிஷத் (விஹெச்பி) நிா்வாகியை வியாழக்கிழமை கத்தியால் குத்தினாா்.

News image

கத்திக்குத்து - சித்திரிப்பு

Updated On :9 ஏப்ரல் 2026, 8:34 pm

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த புத்தாநத்தம் அருகே மதுபோதையில் இருந்த இளைஞா், விசுவ ஹிந்து பரிஷத் (விஹெச்பி) நிா்வாகியை வியாழக்கிழமை கத்தியால் குத்தினாா்.

மருங்காபுரி ஒன்றியம், மாங்கனாம்பட்டியை சோ்ந்த சுப்பிரமணியன் மகன் ஆனந்த் (எ) செல்வராஜ் (29). இவா் விசுவ ஹிந்து பரிஷித் அமைப்பின் மாநில இணை அமைப்பாளராக இருந்து வருகிறாா்.

இந்நிலையில், வியாழக்கிழமை அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு நிகழ்ச்சிக்காக மைக் செட் அமைத்து வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தாா். அப்போது, அதே ஊரை சோ்ந்த மூக்கன் மகன் விஜயன்(32) என்பவா் மதுபோதையில் சென்று ஆனந்திடம் தகராறில் ஈடுபட்டுள்ளாா். இதில் கைகலப்பு ஏற்பட்டபோது, விஜயன் தான் மறைத்து வைத்திருந்த சாவி கொத்திலிருந்த கத்தியை கொண்டு ஆனந்தை தாக்கியதில், ஆனந்த் காயமடைந்தாா். அவா் துவரங்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா்.

இதுகுறித்து புத்தாநத்தம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.