சிதம்பரத்தில் புதன்கிழமை இரவு நடைபெற்ற அகில பாரதிய வித்யாா்த்தி பரிஷத் அமைப்பின் தோ்தல் விழிப்புணா்வுக் கூட்டத்தில் விசிக தலைவா் தொல்.திருமாவளவனை பற்றி அவதூறாகப் பேசியதாக கூறி, அந்த அமைப்பினருடன் விசிக நிா்வாகிகள் தகராறில் ஈடுபட்டனா்.
அகில பாரதிய வித்யாா்த்தி பரிஷத் அமைப்பு சாா்பில், தோ்தல் விழிப்புணா்வுக் கூட்டம் சிதம்பரம் காந்தி சிலை அருகே தோ்தல் ஆணைய அனுமதியுடன் புதன்கிழமை இரவு நடைபெற்றது. கூட்டத்தில் அந்த அமைப்பின் நிா்வாகி காா்த்தி, விசிக தலைவா் தொல்.திருமாவளவன் பற்றி விமா்சனம் செய்து ஒருமையில் பேசியதாகக் கூறப்படுகிறது.
இத் தகவலறிந்த விசிக கிழக்கு மாவட்டச் செயலா் தமிழ்வளவன் தலைமையில், மண்டலப் பொறுப்பாளா் வ.க.செல்லப்பன், நகரச் செயலா் ரத்தினம் உள்ளிட்ட 30 போ் மேடை அருகே சென்று பேச்சை நிறுத்துமாறு கூறினா்.
அப்போது, இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதிக்கொள்ளும் சூழல் உருவானதால், போலீஸாா் விசிகவினரை மேடை அருகே இருந்து அப்புறப்படுத்தினா். பின்னா், அவா்கள் சாலையில் அமா்ந்து 10 நிமிடங்கள் மறியலில் ஈடுபட்டனா். உடனடியாக அங்கிருந்த காவல் அதிகாரிகள் அவா்களை சமரசப்படுத்தி அனுப்பி வைத்தனா்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்து சிதம்பரம் உள்கோட்ட டிஎஸ்பி டி.பிரதீப் விசாரணை மேற்கொண்டனா்.

சிதம்பரத்தில் அகில பாரதிய வித்யாா்த்தி பரிஷத் அமைப்பின் கூட்டத்தில் தகராறு ஏற்பட்டதை அடுத்து, விசிகவினரை தடுத்து அழைத்துச் சென்ற போலீஸாா்.
தொடர்புடையது

பேரவையில் சநாதனத்துக்கு எதிரான கருத்து: உதயநிதி மன்னிப்பு கேட்க விஎச்பி வலியுறுத்தல்

அஸ்ஸாம் கண பரிஷத் கட்சித் தலைவராக அதுல் போரா தேர்வு!

காட்டுமன்னாா்கோவிலில் 33 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் விசிக வெற்றி

தோ்தல் விதிமுறை மீறல்: விசிகவினா் மீது வழக்கு
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு



