ஆளுநருடன் விஜய் சந்திப்பு! ஆட்சியமைக்க உரிமை கோரினார்!தவெக ஆட்சியில் காங்கிரஸ் இடம்பெறும்! கிரிஷ் சோடங்கர் மு.க. ஸ்டாலினுடன் ரஜினி சந்திப்பு! மக்களவைத் தேர்தலிலும் தவெகவுடன் கூட்டணி தொடரும்! காங்கிரஸ் காங்கிரஸ் பேரவைக் குழுத் தலைவர் ராஜேஷ் குமார்! தமிழகத்தில் ஆட்சியமைக்க தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு! திமுகவுடனான கூட்டணி முறிவு!
/

அஸ்ஸாம் கண பரிஷத் கட்சித் தலைவராக அதுல் போரா தேர்வு!

அஸ்ஸாம் கண பரிஷத் கட்சியின் தலைவரான அதுல் போரா..

News image

அதுல் போரா - ANI

Updated On :6 மே 2026, 4:06 pm IST

அஸ்ஸாம் கண பரிஷத் கட்சியின் தலைவராக அதுல் போரா ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

2026 சட்டப்பேரவைத் தேர்தல்களில் ஆளும் பாஜக 126 தொகுதிகளில் 82-ஐக் கைப்பற்றியது. அதன் கூட்டணிக் கட்சிகளான போடோலாந்து மக்கள் முன்னணி மற்றும் அஸ்ஸாம் கண பரிஷத் ஆகியவை தலா 10 தொகுதிகளை வென்றன.

புதிதாக அமையவுள்ள அரசை வழிநடத்த, பாஜகவைச் சேர்ந்த ஹிமந்த பிஸ்வ சர்மா பெயரை சட்டப்பேரவை உறுப்பினர்கள் முன்மொழிந்தனர்.

அஸ்ஸாம் கண பரிஷத் சட்டப்பேரவையின் முதல் கூட்டம் இன்று நடைபெற்றது.

இதுதொடர்பாக அதுல் போரா கூறியதாவது,

கூட்டத்தில் பங்கேற்றவர்கள், ஏ.ஜி.பி-க்கும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் மாநில மக்கள் அளித்த அமோக ஆதரவுக்குத் தங்கள் நன்றியைத் தெரிவித்தனர்.

அஸ்ஸாம் போராட்டத்தின் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. சட்டவிரோத வெளிநாட்டினருக்கு எதிராக ஆறு ஆண்டுகள் நடைபெற்ற அஸ்ஸாம் போராட்டத்தின் விளைவாகவே ஏஜிபி கட்சி உருவாக்கப்பட்டது.

சட்டப்பேரவைக் கட்சி தன்னைத் தலைவராகவும், கட்சியின் செயல் தலைவர் கேஷப் மஹந்தாவை கட்சியின் துணைத் தலைவராகவும் ஒருமனதாகத் தேர்ந்தெடுத்ததாக அவர் தெரிவித்தார்.

இத்தேர்தல்களில், போரா மற்றும் மஹந்தா ஆகியோர் முறையே தங்கள் போக்காகாட் மற்றும் காளியாபோர் தொகுதிகளைத் தக்கவைத்துக் கொண்டனர்.

திமோரியா தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் தபன் தாஸ் சட்டப்பேரவைக் கட்சியின் செயலாளராகவும், பஜாலி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் தர்மேஸ்வர் ராய் முதன்மை கொறடாவாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகக் கட்சித் தலைவர் தெரிவித்தார்.

தபன் தாஸ், தர்மேஸ்வர் ராய் ஆகிய இருவரும் முதல் முறையாகச் சட்டப்பேரவை உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் ஆவர்.

முந்தைய அரசில் முதல்வராகப் பதவி வகித்தபோது ஹிமந்த பிஸ்வ சர்மா ஆற்றிய மகத்தான வளர்ச்சிப் பணிகளைக் கருத்தில் கொண்டு, புதிய அரசை வழிநடத்த ஹிமந்த பிஸ்வ சர்மாவின் பெயரை ஒருமனதாக முன்மொழிந்தது.

எம்எல்ஏக்கள் அனைவரும் தங்கள் சொந்தத் தொகுதிகளின் வளர்ச்சிக்கும், அதேபோல மாநிலத்தின் மற்றும் அதன் பழங்குடி மக்களின் வளர்ச்சிக்கும் பாடுபடுவோம் என்று உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

126 உறுப்பினர்களைக் கொண்ட சட்டப்பேரவைக்கான தேர்தல் ஏப்ரல் 9-ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்றன, வாக்கு எண்ணிக்கை மே 4-ஆம் தேதி நடைபெற்றது.

Summary

Asom Gana Parishad (AGP) president Atul Bora was on Wednesday unanimously elected as its legislature party leader by the newly elected MLAs.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.