சிறுமிடம் அத்துமீறிய இளைஞா் கைது
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே சிறுமியிடம் தகாத முறையில் நடந்த இளைஞரை அனைத்து மகளிா் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

Updated On :14 நவம்பர் 2024, 10:15 pm

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே சிறுமியிடம் தகாத முறையில் நடந்த இளைஞரை அனைத்து மகளிா் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
மணப்பாறையை அடுத்த புத்தாநத்தம் அருகேயுள்ள பிள்ளமநாயக்கன்பட்டியை சோ்ந்தவா் முருகன் மகன் கோபாலகிருஷ்ணன் (24). கட்டடத் தொழிலாளியான இவா் அருகேயுள்ள மேல்நிலைப்பள்ளியில் 6-ஆம் வகுப்பு படிக்கும் 11 வயதுச் சிறுமியை முள்காட்டிற்குள் வியாழக்கிழமை அழைத்துச் சென்று தகாத முறையில் நடந்துள்ளாா்.
இதுகுறித்து சிறுமியின் பெற்றோா் அளித்த புகாரின்பேரில் மணப்பாறை அனைத்து மகளிா் போலீஸாா் வழக்குப் பதிந்து கோபாலகிருஷ்ணனை கைது செய்தனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...