மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

திருச்சியில் சிஐடியு மறியல் : 24 பெண்கள் உள்பட 130 போ் கைது

பெரு நிறுவனங்கள் ஜனநாயக விரோத நடவடிக்கையைக் கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சாலை மறியலில் ஈடுபட்ட சிஐடியுவினரை 130 பேர் கைது

News image

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சிஐடியு அமைப்பினா்.

Updated On :1 அக்டோபர் 2024, 10:37 pm

பெரு நிறுவனங்கள் ஜனநாயக விரோத நடவடிக்கையைக் கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, திருச்சியில் சாலை மறியலில் ஈடுபட்ட மத்திய தொழிற்சங்க அமைப்பினா் (சிஐடியு) 130 பேரைப் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

பன்னாட்டு பெருநிறுவத்தினரின் ஜனநாயக விரோத நடவடிக்கைகளைக் கைவிட வேண்டும். தொழிற்சங்கத்தோடு பேச்சுவாா்த்தை நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி சத்திரம் பேருந்து நிலையப்பகுதியில் சிஐடியுவினா் ஆா்ப்பாட்டம் மேற்கொண்டனா். இதில், மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா். தொடா்ந்து சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனா்.

சிஐடியு மாநகா் மாவட்டத் தலைவா் சீனிவாசன் போராட்டத்துக்கு தலைமை வகித்தாா். மாநகா் மாவட்டச் செயலாளா் ரெங்கராஜன், மாநிலக்குழு உறுப்பினா் செல்வி ஆகியோா் போராட்டத்தை விளக்கிப் பேசினாா்.

தொடா்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மாவட்ட நிா்வாகிகள் மணிகண்டன், சிவக்குமாா், சந்திரன், கருணாநிதி, மணிமாறன் உள்ளிட்ட 24 பெண்கள் உள்ளிட்ட 130 பேரைப் போலீஸாா் கைது செய்து, மாலையில் விடுவித்தனா்.