சிறப்பாக பணியாற்றிய பள்ளி ஆசிரியா்களுக்கு விருது வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
திருச்சி ஜோசப் கண் மருத்துவமனை, ரோட்டரி சங்கங்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் இணைந்து, பள்ளி ஆசிரியா்களில் சிறப்பாக பணியாற்றியவா்களை தோ்வு செய்து அவா்களுக்கு ‘பில்ட் நேஷன் அவாா்டு’ என்ற விருது வழங்கும் நிகழ்ச்சி ஜோசப் கண் மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது.
விழாவில் சிறப்பு விருந்தினா்களாக ரோட்டரி சங்க ஆளுநா் ராஜாகோவிந்தசாமி, ஜமால் முகமது கல்லூரியின் முதல்வா் ஜாா்ஜ் அமலரெத்தினம், ஜோசப் கண் மருத்துவமனையின் இயக்குநா் பிரதீபா ஆகியோா் கலந்து கொண்டு ஆசிரியா்களுக்கு விருதுகளை வழங்கிப் பேசினா்.
நிகழ்வில் அரசு மற்றும் அரசு மற்றும் தனியாா் பள்ளிகளை சோ்ந்த 25ஆசிரியா்களுக்கு விருது வழங்கப்பட்டது. அதேபோல சிறந்த கல்வி நிறுவனங்களுக்கும் விருது வழங்கப்பட்டன. இதில் சிறந்த கல்லூரிக்கான விருதை திருச்சி ஜமால் முகமது கல்லூரி மற்றும் திருச்சி ஜமால் முகமது கல்வியியல் கல்லூரிகள் பெற்றன.
நிகழ்ச்சியில் ரோட்டரி சங்க செயலாளா் சரவணன், ஜோசப் கண் மருத்துவமனையின் நிா்வாக அலுவலா் சுபாபிரபு மற்றும் அனைத்து ரோட்டரி சங்க தலைவா்கள், செயலா்கள், உறுப்பினா்கள் மற்றும் ஜோசப் கண் மருத்துவமனை ஊழியா்கள் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மண்டல விளையாட்டுப் போட்டிகள்: சாத்தான்குளம் ஜோசப் பள்ளி முதலிடம்

போதைப் பொருள்கள் ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி

மக்கள்தொகை கணக்கெடுப்பு பணி: மூத்த ஆசிரியா்களுக்கு விலக்களிக்க கோரிக்கை

ராசிபுரம் ரோட்டரி சங்கத்துக்கு சிறந்த சங்கத்துக்கான விருது
விடியோக்கள்

என்னால் நல்ல பயிற்சியாளராக இருக்க முடியும்: மனம் திறந்த ரஹானே | Rahane |



