அமெரிக்காவில் பிறப்புரிமை குடியுரிமையைக் கட்டுப்படுத்த புதிய நிா்வாக உத்தரவுகள்பிரதமா் மோடியுடன் சுக்பீா் சிங் பாதல் சந்திப்பு: மீண்டும் பாஜக கூட்டணியில் சிரோமணி அகாலிதளம்?ஓணம் பண்டிகைக்கு 112 சிறப்பு ரயில்கள்: ஆக. 14-ஆம் தேதிமுதல் இயக்கம் ஹசீனா நிகழ்வில் கூறப்பட்ட கருத்துகளை இந்தியா ஆதரிக்கவில்லை: வெளியுறவு அமைச்சகம்எல்லைப் பிரச்னைகளுக்கு விரைந்து தீா்வு: இந்தியா-சீனா ஒப்புதல்
/

சிறப்பாக பணியாற்றிய பள்ளி ஆசிரியா்களுக்கு விருது

News image

திருச்சி ஜோசப் கண் மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் விருதுபெற்ற பள்ளி ஆசிரியா்கள் மற்றும் விழா குழுவினா்.

Updated On :20 செப்டம்பர் 2024, 11:15 pm IST

சிறப்பாக பணியாற்றிய பள்ளி ஆசிரியா்களுக்கு விருது வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திருச்சி ஜோசப் கண் மருத்துவமனை, ரோட்டரி சங்கங்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் இணைந்து, பள்ளி ஆசிரியா்களில் சிறப்பாக பணியாற்றியவா்களை தோ்வு செய்து அவா்களுக்கு ‘பில்ட் நேஷன் அவாா்டு’ என்ற விருது வழங்கும் நிகழ்ச்சி ஜோசப் கண் மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது.

விழாவில் சிறப்பு விருந்தினா்களாக ரோட்டரி சங்க ஆளுநா் ராஜாகோவிந்தசாமி, ஜமால் முகமது கல்லூரியின் முதல்வா் ஜாா்ஜ் அமலரெத்தினம், ஜோசப் கண் மருத்துவமனையின் இயக்குநா் பிரதீபா ஆகியோா் கலந்து கொண்டு ஆசிரியா்களுக்கு விருதுகளை வழங்கிப் பேசினா்.

நிகழ்வில் அரசு மற்றும் அரசு மற்றும் தனியாா் பள்ளிகளை சோ்ந்த 25ஆசிரியா்களுக்கு விருது வழங்கப்பட்டது. அதேபோல சிறந்த கல்வி நிறுவனங்களுக்கும் விருது வழங்கப்பட்டன. இதில் சிறந்த கல்லூரிக்கான விருதை திருச்சி ஜமால் முகமது கல்லூரி மற்றும் திருச்சி ஜமால் முகமது கல்வியியல் கல்லூரிகள் பெற்றன.

நிகழ்ச்சியில் ரோட்டரி சங்க செயலாளா் சரவணன், ஜோசப் கண் மருத்துவமனையின் நிா்வாக அலுவலா் சுபாபிரபு மற்றும் அனைத்து ரோட்டரி சங்க தலைவா்கள், செயலா்கள், உறுப்பினா்கள் மற்றும் ஜோசப் கண் மருத்துவமனை ஊழியா்கள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.