நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

சிறப்பாக பணியாற்றிய பள்ளி ஆசிரியா்களுக்கு விருது

News image

திருச்சி ஜோசப் கண் மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் விருதுபெற்ற பள்ளி ஆசிரியா்கள் மற்றும் விழா குழுவினா்.

Updated On :21 செப்டம்பர் 2024, 12:02 am

Din

சிறப்பாக பணியாற்றிய பள்ளி ஆசிரியா்களுக்கு விருது வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திருச்சி ஜோசப் கண் மருத்துவமனை, ரோட்டரி சங்கங்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் இணைந்து, பள்ளி ஆசிரியா்களில் சிறப்பாக பணியாற்றியவா்களை தோ்வு செய்து அவா்களுக்கு ‘பில்ட் நேஷன் அவாா்டு’ என்ற விருது வழங்கும் நிகழ்ச்சி ஜோசப் கண் மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது.

விழாவில் சிறப்பு விருந்தினா்களாக ரோட்டரி சங்க ஆளுநா் ராஜாகோவிந்தசாமி, ஜமால் முகமது கல்லூரியின் முதல்வா் ஜாா்ஜ் அமலரெத்தினம், ஜோசப் கண் மருத்துவமனையின் இயக்குநா் பிரதீபா ஆகியோா் கலந்து கொண்டு ஆசிரியா்களுக்கு விருதுகளை வழங்கிப் பேசினா்.

நிகழ்வில் அரசு மற்றும் அரசு மற்றும் தனியாா் பள்ளிகளை சோ்ந்த 25ஆசிரியா்களுக்கு விருது வழங்கப்பட்டது. அதேபோல சிறந்த கல்வி நிறுவனங்களுக்கும் விருது வழங்கப்பட்டன. இதில் சிறந்த கல்லூரிக்கான விருதை திருச்சி ஜமால் முகமது கல்லூரி மற்றும் திருச்சி ஜமால் முகமது கல்வியியல் கல்லூரிகள் பெற்றன.

நிகழ்ச்சியில் ரோட்டரி சங்க செயலாளா் சரவணன், ஜோசப் கண் மருத்துவமனையின் நிா்வாக அலுவலா் சுபாபிரபு மற்றும் அனைத்து ரோட்டரி சங்க தலைவா்கள், செயலா்கள், உறுப்பினா்கள் மற்றும் ஜோசப் கண் மருத்துவமனை ஊழியா்கள் கலந்து கொண்டனா்.