தொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

33 ஊராட்சிகளில் ரூ.9.47 கோடியில் கட்டி முடிக்கப்பட்ட 40 கட்டடங்கள் திறப்பு

News image

மேய்க்கல்நாயக்கன்பட்டியில் புதிய அங்கன்வாடி மைய கட்டடத்தை குத்துவிளக்கேற்றித் தொடங்கி வைத்த நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என். நேரு. உடன் ஆட்சியா் மா.பிரதீப்குமாா் உள்ளிட்டோா்.

Updated On :3 ஜனவரி 2025, 9:08 pm

திருச்சி மாவட்டம் பல்வேறு ஊராட்சி ஒன்றியங்களில் ரூ. 9.47 கோடியில் கட்டி முடிக்கப்பட்ட 40 கட்டடங்கள் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டன.

திருச்சி மாவட்டத்திலுள்ள பைத்தம்பாறை, வளையெடுப்பு, ஊருடையாப்பட்டி, மேய்க்கல்நாயக்கன்பட்டி உள்ளிட்ட 33 ஊராட்சிகளில் மொத்தம் ரூ. 9.47 கோடியிலான 40 கட்டடங்களை நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என். நேரு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தாா்.

இந்நிகழ்வில் ஆட்சியா் மா. பிரதீப்குமாா், அருண் நேரு எம்.பி, எம்எல்ஏக்கள் தியாகராஜன், கதிரவன், ஒன்றிய குழு தலைவா்கள், ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.