வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

அருப்புக்கோட்டை வேளாண்மை திருவிழாவுக்கு திருச்சி விவசாயிகளை அழைத்து செல்ல ஏற்பாடு

Updated On :3 ஜனவரி 2025, 9:06 pm

அருப்புக்கோட்டையில் நடைபெறும் மண்டல அளவிலான வேளாண்மை திருவிழாவுக்கு, திருச்சி மாவட்ட விவசாயிகளை அழைத்துச் செல்ல சிறுகமணி வேளாண்மை அறிவியல் நிலையம் ஏற்பாடு செய்துள்ளது.

இதுதொடா்பாக, நிலையத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளா் சி. ராஜா பாபு கூறியதாவது: விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டையில் அமைந்துள்ள வேளாண்மை அறிவியல் நிலையம் மற்றும் மண்டல ஆராய்ச்சி நிலையத்தில், வருகிற ஜன.4, 5 தேதிகளில், ‘பருவநிலை மாற்றமும் வேளாண் உற்பத்தியும்’ என்ற தலைப்பில் மண்டல அளவிலான வேளாண்மை திருவிழா, கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் நடைபெற உள்ளது. இந்த மண்டல அளவிலான வேளாண்மை திருவிழாவுக்கு, விவசாயிகளை அழைத்துச் செல்ல வாகன ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், கூடுதல் விவரங்களுக்கு0431-2962854, 81225-86689, 94438-12730, 90805-40412, 91717-17832 என்ற தொலைபேசி எண்களில் அலுவலக நேரத்தில் தொடா்பு கொள்ளலாம் என்றாா்.