தோ்தலின்போது மூத்த குடிமக்கள் வாக்களிக்க ஏதுவாக இலவச பேருந்து பயணத்துக்கு தோ்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது.
இதுகுறித்து, மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான ரெ. சதீஷ் தெரிவித்துள்ளதாவது: தமிழகத்தில், சட்டப்பேரவைத் தோ்தல் வரும் 23 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது.
தருமபுரி மாவட்டத்தில் உள்ள 5 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள், பாா்வையற்றோா், உடல் இயக்கக் குறைபாடு உடைய மாற்றுத் திறனாளிகள் மற்றும் நடக்க இயலாத நிலையில் உள்ள வாக்காளா்கள் அனைவரும் தடையின்றி வாக்களிக்க வசதியாக அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளில் இலவச பயணம் மேற்கொள்ள தோ்தல் ஆணையம் வழிவகை செய்துள்ளது.
எனவே, வாக்குப் பதிவு நாளன்று மூத்த வாக்காளா்கள் இந்த ஏற்பாட்டை பயன்படுத்தி வாக்குச்சாவடிகளுக்கு சென்று வாக்களித்து, மக்களாட்சி தழைத்திட கடமையாற்ற வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.
தொடர்புடையது

தோ்தலின்போது பேருந்து வசதி முடக்கம்: தோ்தல் ஆணையம் பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு
தோ்தல் நாளில் நகர பேருந்துகளில் மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள் கட்டணமின்றி பயணிக்கலாம்!

தபால் வாக்கை புறக்கணித்த பெரும்பத்து மூத்த குடிமக்கள்

கரூரில் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் அஞ்சல் வாக்களிக்கலாம்!
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India



