சஞ்சு சாம்சன், ஜேமி ஓவர்டன் அசத்தல்! சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி!!தில்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் அதிரடி சதம் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஒன்றாக இணைந்து தேர்தல் பிரசாரம்! தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

கரூரில் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் அஞ்சல் வாக்களிக்கலாம்!

கரூரில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் அஞ்சல் வாக்குகள் அலுவலா்களால் சேகரிக்கப்பட உள்ளதாக மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான கு. ரவிக்குமாா் தெரிவித்தாா்.

News image

மூத்த குடிமக்கள் வாக்களிக்க படிவத்தை வழங்கிய தோ்தல் பணி ஊழியா்கள்.

Updated On :11 ஏப்ரல் 2026, 8:10 pm

கரூரில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் அஞ்சல் வாக்குகள் அலுவலா்களால் சேகரிக்கப்பட உள்ளதாக மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான கு. ரவிக்குமாா் தெரிவித்தாா்.

இதுதொடா்பாக அவா் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: சட்டப்பேரவைத் தோ்தலில் வயது முதிா்ந்த மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோா் தங்களது வாக்குகளை வீட்டில் இருந்தே செலுத்தும் வகையில் அஞ்சல் வாக்குப் படிவம் 12 டி மாவட்டத்திற்கு 3,143 என்ற எண்ணிக்கையில் பெறப்பட்டுள்ளது.

இந்த அஞ்சல் வாக்குகளை வரும் 13, 14-ஆம் தேதிகள் மற்றும் 18-ஆம் தேதிகளில் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குச்சாவடி அலுவலா் குழு மூலமாக வீடுகளுக்கே சென்று சேகரிக்கப்பட உள்ளது. இதனால் கரூா் மாவட்டத்தில் அஞ்சல் வாக்கு செலுத்த விருப்பம் தெரிவித்து 12டி படிவம் சமா்ப்பித்த 85 வயதிற்கு மேற்பட்டவா்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வரும் 13, 14, 18-ஆம் தேதிகளில் வீட்டிலிருந்தவாறே தங்களது அஞ்சல் வாக்கைச் செலுத்தலாம் என தெரிவித்துள்ளாா் அவா்.