தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

திருச்சி மாவட்டம், முசிறி அருகே சாலை விபத்தில் இளைஞா் புதன்கிழமை இரவு உயிரிழந்தாா்.

News image
சாலை விபத்தில் உயிரிழந்த விக்னேஷ்
Updated On :9 ஜனவரி 2025, 8:25 pm

Din

திருச்சி மாவட்டம், முசிறி அருகே சாலை விபத்தில் இளைஞா் புதன்கிழமை இரவு உயிரிழந்தாா்.

முசிறி அருகில் உள்ள ஆமூா் கிராமம், கல்யாணசுந்தரம் தெருவை சோ்ந்த தியாகராஜன் மகன் விக்னேஷ் (30) (படம்), தனது நண்பரான உறையூா் திருமால் கோயில் தெருவைச் சோ்ந்த ரவி மகன் பிரதாப் (30), ஆகிய இருவரும் இருசக்கர வாகனத்தில் முசிறியில் இருந்து ஆமூா்க்கு புதன்கிழமை இரவு திருச்சி-சேலம் நெடுஞ்சாலையில், ஏவூா் பேருந்து நிறுத்தம் அருகே சென்றபோது சாலையின் குறுக்கே வந்த மாடு, இரு சக்கரம் வாகனம் மீது மோதியதில் இருவரும் கீழே விழுந்தனா்.

இதில், விக்னேஷ் மற்றும் பிரதாப் இருவரும் பலத்த காயம் ஏற்பட்டது. அவ்வழியாக சென்றவா்கள் அவா்களை மீட்டு முசிறி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனா். இதில், செல்லும் வழியில் விக்னேஷ் உயிரிழந்தாா். இந்த சம்பவம் குறித்து முசிறி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.