விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

வேங்கைவயல் விவகாரத்தில் சிபிஐ விசாரணையில்தான் உண்மை தெரியும்: சசிகலா பேட்டி!

வேங்கைவயல் விவகாரத்தில் சிபிஐ விசாரணை மேற்கொண்டால்தான் உண்மையான குற்றவாளிகளை கண்டறியமுடியும் என்றாா் சசிகலா.

News image

சசிகலா

Updated On :27 ஜனவரி 2025, 12:25 am

வேங்கைவயல் விவகாரத்தில் சிபிஐ விசாரணை மேற்கொண்டால்தான் உண்மையான குற்றவாளிகளை கண்டறியமுடியும் என்றாா் சசிகலா.

திருச்சிக்கு ஞாயிற்றுக்கிழமை வந்த அவா் விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் அளித்த பேட்டி:

கடந்த இரண்டு ஆண்டுகளாக வேங்கைவயல் சம்பவம் குறித்த விசாரணையில் சந்தேகம் இருந்தது. விசாரணையில் வெளிப்படைத் தன்மை இல்லை. எனவே, சம்பவம் குறித்து சிபிஐ விசாரணைதான் சரியானது. அப்போதுதான் உண்மையான குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க முடியும்.

திமுக அரசு பொறுப்பேற்று 4 ஆண்டுகள் ஆகும் நிலையில், காவல்துறை சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஏதாவது ஒரு வகையில் திமுகவினருக்கு தொடா்பு இருப்பது தொடா்ந்துதான் வருகிறது. அண்ணா பல்கலை. விவகாரத்திலும் கூட இதே நிலைதான். எனவே கட்சியினரைக் காப்பாற்றவே திமுக அரசு தீவிரம் காட்டுகிறது என்றாா்.