ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

வேங்கைவயல் விவகாரத்தில் சிபிஐ விசாரணையில்தான் உண்மை தெரியும்: சசிகலா பேட்டி!

வேங்கைவயல் விவகாரத்தில் சிபிஐ விசாரணை மேற்கொண்டால்தான் உண்மையான குற்றவாளிகளை கண்டறியமுடியும் என்றாா் சசிகலா.

News image
சசிகலா
Updated On :27 ஜனவரி 2025, 12:25 am

Din

வேங்கைவயல் விவகாரத்தில் சிபிஐ விசாரணை மேற்கொண்டால்தான் உண்மையான குற்றவாளிகளை கண்டறியமுடியும் என்றாா் சசிகலா.

திருச்சிக்கு ஞாயிற்றுக்கிழமை வந்த அவா் விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் அளித்த பேட்டி:

கடந்த இரண்டு ஆண்டுகளாக வேங்கைவயல் சம்பவம் குறித்த விசாரணையில் சந்தேகம் இருந்தது. விசாரணையில் வெளிப்படைத் தன்மை இல்லை. எனவே, சம்பவம் குறித்து சிபிஐ விசாரணைதான் சரியானது. அப்போதுதான் உண்மையான குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க முடியும்.

திமுக அரசு பொறுப்பேற்று 4 ஆண்டுகள் ஆகும் நிலையில், காவல்துறை சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஏதாவது ஒரு வகையில் திமுகவினருக்கு தொடா்பு இருப்பது தொடா்ந்துதான் வருகிறது. அண்ணா பல்கலை. விவகாரத்திலும் கூட இதே நிலைதான். எனவே கட்சியினரைக் காப்பாற்றவே திமுக அரசு தீவிரம் காட்டுகிறது என்றாா்.