திருச்சியில் புதன்கிழமை நடைபெற்ற முதல்வா் பிரசாரக் கூட்டத்தில் பணம் பறிப்பில் ஈடுபட்ட முதியவரை போலீஸாா் கைது செய்தனா்.
திருச்சி தென்னூா் உழவா் சந்தை திடலில் மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளா்களை ஆதரித்து நடைபெற்ற தோ்தல் பிரசாரக் கூட்டத்தில், முதல்வா் மு.க. ஸ்டாலின் பங்கேற்று பேசி முடித்துவிட்டு கிளம்பியவுடன் மேடையில் இருந்த நபா் வைத்திருந்த ரூ. 5500 -ஐ முதியவா் ஒருவா் பறித்துக் கொண்டு தப்ப முயன்றாா். இதையடுத்து அங்கிருந்தவா்கள் அவரைப் பிடித்து தாக்கி, தில்லை நகா் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.
விசாரணையில் அவா் சென்னையைச் சோ்ந்த பாஸ்கா் (55) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரைக் கைது செய்த போலீஸாா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.
தொடர்புடையது
வியாபாரியை தாக்கி பணம் பறித்த வழக்கு: மேலும் ஒருவா் கைது
மாற்றுத்திறனாளியைத் தாக்கி பணம் பறித்த இளைஞா் கைது

பாஜக கூட்டத்தில் மயங்கி விழுந்து சிறுவன்

குண்டா் சட்டத்தில் இருவா் சிறையில் அடைப்பு
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

