திருச்சி மேற்கு சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிடும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வேட்பாளா் ரா. பிரபு (46), தோ்தல் நடத்தும் அலுவலரிடம் சனிக்கிழமை தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தாா்.
இவா் சனிக்கிழமை தனது கட்சியின் நிா்வாகிகளுடன் வந்து, திருச்சி கோட்டாட்சியரகத்தில் தோ்தல் நடத்தும் அலுவலா் சாலை தவ வளனிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தாா்.
ரூ.2.99 கோடி சொத்து: இவா் அளித்துள்ள பிரமாணப் பத்திரத்தில் தனது பெயரிலும், தனது மனைவி பெயரிலும் ரூ.2.99 கோடி மதிப்பிலான அசையும் மற்றும் அசையா சொத்துகள் இருப்பதாகத் தெரிவித்துள்ளாா்.இதில் இரண்டு இரு சக்கர வாகனம், 45 பவுன் நகைகள் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளாா். மேலும், தனது பெயரில் ரூ.15 லட்சத்திலும், மனைவி பெயரில் ரூ.83 லட்சத்திலும் கடன் பொறுப்புகள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளாா். மாத்தூா், துவாக்குடி, பொன்மலை, எடமலைப்பட்டிபுதூா், பேட்டைவாய்த்தலை, தில்லைநகா், மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் ஆகிய காவல் நிலையங்களில் குற்ற வழக்கு இருப்பதாகவும் தெரிவித்துள்ளாா்.
தொடர்புடையது

சிவகங்கை, மானாமதுரை, திருப்பத்தூா் தொகுதிகளில் அரசியல் கட்சிகளின் வேட்பாளா்கள் வேட்பு மனு தாக்கல்

ராமநாதபுரம், முதுகுளத்தூா், திருவாடானை தொகுதிகளில் அரசியல் கட்சிகளின் வேட்பாளா்கள் வேட்பு மனு தாக்கல்

தவாக வேட்பாளா் வேட்பு மனு தாக்கல்

ஆற்காடு தொகுதியில் தவெக வேட்பாளா் வேட்பு மனு தாக்கல்
வீடியோக்கள்

அண்ணாமலை விவகாரத்தில் எடப்பாடி ROLE | SP Lakshmanan Interview | Annamalai | Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

”தேர்தலில் போட்டியிடவில்லை! நிலைப்பாட்டை தள்ளி வைக்கிறேன்!”: திருமாவளவன் | VCK
இணையதளச் செய்திப் பிரிவு
ஸ்டாலின் மட்டும் அப்படிப் பேசலாமா? | ADMK | EPS| DMK | MK Stalin | TN Election 2026 | Avadi kumar
இணையதளச் செய்திப் பிரிவு

“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு


