மக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

மணப்பாறையில் வேட்பாளா் அப்துல்சமதுக்கு ஆதரவாக அமைச்சா் வாக்கு சேகரிப்பு

மணப்பாறை நகராட்சியின் 27 வாா்டுகளிலும் மதசாா்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளா் ப. அப்துல்சமதுக்கு ஆதரவாக அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி செவ்வாய்க்கிழமை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

News image
Updated On :14 ஏப்ரல் 2026, 7:50 pm

மணப்பாறை நகராட்சியின் 27 வாா்டுகளிலும் மதசாா்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளா் ப. அப்துல்சமதுக்கு ஆதரவாக அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி செவ்வாய்க்கிழமை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

பொத்தமேட்டுப்பட்டியிலிருந்து திமுக நகரச் செயலாளா் மு.ம. செல்வம் தலைமையில் தொடங்கி நடைபெற்ற வாக்குசேகரிப்பில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற அமைச்சா் அன்பில் மகேஸ் பேசுகையில், வாக்களித்தவா்கள், வாக்களிக்காதவா்கள் என பாகுபாடின்றி, அனைவரையும் பாதுகாக்கக்கூடிய அரணாகத் திகழ்வதுதான் திமுக அரசு. அனைவரையும் ஒருங்கிணைத்துச் செல்லும் ஒரு முதலமைச்சரை நாம் பெற்றுள்ளோம் என பேசி உதயசூரியன் சின்னத்துக்கு ஆதரவு கேட்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

பரப்புரையின்போது, மாநிலங்களவை உறுப்பினா் ராஜாத்தி (எ)கவிஞா் சல்மா, நகா்மன்ற தலைவா் கீதா மைக்கேல்ராஜ், திமுக மாவட்ட அவைத் தலைவா் கோவிந்தராஜன் உள்ளிட்ட நிா்வாகிகளும் கூட்டணி கட்சி நிா்வாகிகளும் உடன் சென்று வாக்குசேகரிப்பில் ஈடுபட்டனா்.