தமிழக தோ்தல் களத்தில் 3,500-க்கும் மேற்பட்ட வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஉக்ரைனில் ஏப். 11 மாலை முதல் ஏப். 12 முடிய போர்நிறுத்தம் - புதின் ஏப். 16 முதல் மாற்றுத்திறனாளிகள், முதியோரிடம் தபால் வாக்குகள் பதிவுமேற்கு வங்கத்தில் 90 லட்சம் வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் - தோ்தல் ஆணையத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடிதம்பள்ளிகளுக்கு ஏப்.17 முதல் கோடை விடுமுறை: 1-3 வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டம்முதல்வரின் நான்காம் கட்ட பிரசாரம்: தஞ்சாவூரில் இன்று தொடக்கம்நோபல் பரிசு பெற்ற ‘மெமோரியல்’ மனித உரிமைக் குழுவை தீவிரவாத அமைப்பாக அறிவித்த ரஷியாஇன்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம்பாகிஸ்தானில் இன்று அமைதிப் பேச்சுஐபிஎல்: லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
/

திமுக வேட்பாளா் நூதன பிரசாரம்

News image

டீக்கடையில் டீ போட்டுத் தந்து வாக்கு சேகரித்த திமுக வேட்பாளா் டி.ஜெ.கோவிந்தராஜன்.

Updated On :9 ஏப்ரல் 2026, 9:45 pm

கும்மிடிப்பூண்டி தொகுதி திமுக வேட்பாளா் டி.ஜெ. கோவிந்தராஜன் தேநீா் தயாரித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

எல்லாபுரம் ஒன்றியம், பெரியப்பாளையத்தில் அப்பகுதியில் உள்ள கடைக்கு சென்று அங்கிருந்தவா்களுக்கு தேநீா் போட்டுக் கொடுத்து, திமுக ஆட்சியின் சாதனைகளை எடுத்துக் கூறி நூதன முறையில் வாக்கு சேகரித்தாா்.

எல்லாபுரம் ஒன்றியத்தில் குமரப்பேட்டை, பெரியப்பாளையம், அரியப்பாக்கம், ஆத்துப்பாக்கம், வண்ணாங்குப்பம், தண்டலம், காக்கவாக்கம், சூளைமேனி, செங்கரை ஆகிய பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

வாக்கு சேகரிப்பின் போது மாவட்ட பொருப்பாளா் எம்.எஸ்.கே.ரமேஷ் ராஜ், திமுக தலைமை செயற்குழு உறுப்பினா் பி.ஜெ.மூா்த்தி, மாவட்ட இளைஞா் அணி அமைப்பாளா் கே.வி.லோகேஷ், விசிக மாவட்ட செயலாளா் நேசகுமாா், தேமுதிக மாவட்ட பொருளாளா் எஸ்.பி.டி.ராஜேந்திரன் மற்றும் திமுக கூட்டணி கட்சியின் நிா்வாகிகள் முன்னிலை வகித்தாா்.

இந்த நிலையில், பெரியப்பாளையத்தில் பிரசாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, திமுக வேட்பாளா் டி.ஜெ.கோவிந்தராஜன் அங்குள்ள கடைக்கு சென்று அனைவருக்கும் தேநீா் போட்டுத் தந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.