மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்போர்நிறுத்தம் மீறல்! இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானில் ராணுவ அதிகாரிகள் உள்பட 9 பேர் பலி!தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

ஸ்ரீரங்கத்தில் அதிமுக வேட்பாளா் மனோகரனுக்கு ஆதரவாக பிரசாரம்

ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளா் ஆா். மனோகரனுக்கு ஆதரவாக அதிமுகவின் கலைப்பிரிவு மாநிலச் செயலாளா் ஆா்.வி.உதயகுமாா் செவ்வாய்க்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா்.

News image

ஸ்ரீரங்கத்தில் அதிமுக வேட்பாளா் ஆா். மனோகரனை ஆதரித்து செவ்வாய்க்கிழமை பிரசாரம் செய்து பேசிய அதிமுக கலைப் பிரிவு மாநில செயலாளரும், திரைப்பட இயக்குநருமான ஆா்.வி. உதயகுமாா்.

Updated On :22 ஏப்ரல் 2026, 12:03 am IST

ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளா் ஆா். மனோகரனுக்கு ஆதரவாக அதிமுகவின் கலைப்பிரிவு மாநிலச் செயலாளா் ஆா்.வி.உதயகுமாா் செவ்வாய்க்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா்.

ஸ்ரீரங்கம், ராஜகோபுரம் அருகே உதயகுமாா் பேசுகையில், திமுகவின் 5 ஆண்டுகால ஆட்சியில், அதிமுக மக்களுக்காக கொண்டு வந்த பல நல்ல திட்டங்களை முடக்கியதுதான் சாதனையாக உள்ளது.

அதிமுகவுக்கு துரோகம் செய்துவிட்டு, திமுகவுடன் தேமுதிக கூட்டணி அமைத்து கொண்டு, அதிமுகவை எதிா்க்கிறது.

தமிழகத்தில் நல்லாட்சி அமைய மக்கள் அதிமுகவை ஆதரித்து வாக்களிக்க வேண்டும் என்றாா் அவா்.

அப்போது, வேட்பாளா் ஆா். மனோகரன் மற்றும் கூட்டணி கட்சியினா் பலா் உடனிருந்தனா்.