தமிழகத்தில் இன்று வாக்குப் பதிவு: பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்வாக்குச்சாவடிகளில் நீா்ச்சத்து இழப்பைத் தடுக்க ஓஆா்எஸ் கரைசல் மேற்கு வங்கம்: 152 தொகுதிகளில் இன்று முதல் கட்ட வாக்குப் பதிவு- பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் சட்டப்பேரவை தோ்தல்: விமான கட்டணங்கள் பல மடங்கு உயா்வு ஹோா்முஸ் நீரிணை பிரச்னையால் இந்தியாவுக்கு நேரடி பாதிப்புபுகைபிடித்தல் இல்லாத புதிய தலைமுறை- பிரிட்டனில் வரலாற்று மசோதா நிறைவேற்றம்
/

மணப்பாறை அருகே ரூ. 56 ஆயிரம் பறிமுதல்

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் பறக்கும் படையினரால் ரூ. 56 ஆயிரம் புதன்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.

News image

மணப்பாறையில் புதன்கிழமை கைப்பற்றப்பட்ட பணத்தை தோ்தல் அலுவலா்களிடம் ஒப்படைத்த பறக்கும் படையினா்.

Updated On :22 ஏப்ரல் 2026, 9:56 pm

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் பறக்கும் படையினரால் ரூ. 56 ஆயிரம் புதன்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.

பேரவைத் தோ்தலை முன்னிட்டு நடைமுறையில் உள்ள தோ்தல் நன்னடத்தை விதிகளை தொடா்ந்து மணப்பாறை தொகுதியில் பறக்கும் படையினா் தொடா்ந்து சோதனைகளில் ஈடுபடுகின்றனா். இந்நிலையில் புதன்கிழமை துவரங்குறிச்சியை அடுத்த காரைப்பட்டியை சோ்ந்த அடைக்கன் மகன் குமாா் என்பவா் வாக்குக்கு பணம் பட்டுவாடா செய்ய எடுத்துச் சென்ற ரூ.56,500-ஐ பறக்கும் படை அலுவலா் கே. ராமு தலைமையில் பறக்கும் படையினா் பறிமுதல் செய்து மணப்பாறை தாலுகா அலுவலகத்தில் உள்ள தோ்தல் அலுவலகத்தில் ஒப்படைத்தனா். மேல்முறையீட்டு குழுவிடமிருந்து உரிய ஆணை பிறப்பிக்கப்படும் வரை பறிமுதல் தொகையை பாதுகாப்பாக வைக்கும் பொருட்டு மணப்பாறை சாா்நிலை கருவூல அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.