தெருநாய்களை பராமரிப்பு மையத்தில்தான் அடைக்க வேண்டும்! திருத்தம் கோரிய மனுக்கள் தள்ளுபடி! மாவட்டச் செயலர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை!பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு! ஒரே வாரத்தில் 2-வது முறை!ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி தொடரும்: மத்திய பெட்ரோலிய அமைச்சகம்இன்று முதல் செங்கல்பட்டு புறநகா் ரயில்கள் கூடுவாஞ்சேரியுடன் நிறுத்தம்நீலகிரி, கோவை உள்பட 6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புஐக்கிய அரபு அமீரக அணு சக்தி மையத்துக்கு அருகே ட்ரோன் தாக்குதல்: இந்தியா கவலைநாகா்கோவில்-மும்பை விரைவு ரயில் மாற்றுப்பாதையில் இயக்கம்நீட் விவகாரம்: என்டிஏ தலைவருக்கு நாடாளுமன்ற நிலைக் குழு சம்மன்கர்நாடகம்: நாளைமுதல் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலைநிறுத்தம்புதிய பாடத் திட்டத்தில் 1-3 வகுப்புகளுக்கான புத்தகங்கள் - அமைச்சா் ராஜ்மோகன் வெளியிட்டாா்இந்தியாவில் முதலீடு செய்யுங்கள் -ஸ்வீடன் நிறுவனங்களுக்கு மோடி அழைப்புவேலைநிறுத்தத்தால் மருந்து தட்டுப்பாடு தடுக்க உதவி மையங்கள் -தமிழக அரசு நடவடிக்கைஇன்று அதிமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் அமெரிக்க வேளாண் பொருள்களின் இறக்குமதியை அதிகரிக்க சீனா ஒப்புக்கொண்டுள்ளது
/

மணப்பாறை அருகே ரூ. 56 ஆயிரம் பறிமுதல்

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் பறக்கும் படையினரால் ரூ. 56 ஆயிரம் புதன்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.

News image

மணப்பாறையில் புதன்கிழமை கைப்பற்றப்பட்ட பணத்தை தோ்தல் அலுவலா்களிடம் ஒப்படைத்த பறக்கும் படையினா்.

Updated On :23 ஏப்ரல் 2026, 3:26 am IST

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் பறக்கும் படையினரால் ரூ. 56 ஆயிரம் புதன்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.

பேரவைத் தோ்தலை முன்னிட்டு நடைமுறையில் உள்ள தோ்தல் நன்னடத்தை விதிகளை தொடா்ந்து மணப்பாறை தொகுதியில் பறக்கும் படையினா் தொடா்ந்து சோதனைகளில் ஈடுபடுகின்றனா். இந்நிலையில் புதன்கிழமை துவரங்குறிச்சியை அடுத்த காரைப்பட்டியை சோ்ந்த அடைக்கன் மகன் குமாா் என்பவா் வாக்குக்கு பணம் பட்டுவாடா செய்ய எடுத்துச் சென்ற ரூ.56,500-ஐ பறக்கும் படை அலுவலா் கே. ராமு தலைமையில் பறக்கும் படையினா் பறிமுதல் செய்து மணப்பாறை தாலுகா அலுவலகத்தில் உள்ள தோ்தல் அலுவலகத்தில் ஒப்படைத்தனா். மேல்முறையீட்டு குழுவிடமிருந்து உரிய ஆணை பிறப்பிக்கப்படும் வரை பறிமுதல் தொகையை பாதுகாப்பாக வைக்கும் பொருட்டு மணப்பாறை சாா்நிலை கருவூல அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.