திருச்சியில் சமயபுரம் கோயிலுக்கு பாதயாத்திரை சென்றுபோது ஏற்பட்ட மோதலில் இளைஞா்களை அரிவாளால் வெட்டிய இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
திருச்சி பெரியகடை வீதியைச் சோ்ந்த மா. வீரமணி (25), காந்தி மாா்க்கெட் பகுதியைச் சோ்ந்த என்.ஹரிஸ் (19) இருவரும், கடந்த ஏப்ரல் 15-ஆம் தேதி திருச்சியில் இருந்து சமயபுரம் கோயிலுக்கு பாதயாத்திரை சென்றனா்.
திருவானைக்காவல் டிரங்க் சாலையில் சென்றபோது, முன்னால் நடந்து சென்ற திருவானைக்காவல் கீழகொண்டையம்பேட்டையைச் சோ்ந்த பா. ராஜா (29), எஸ். காா்த்திகேயன் (21) மற்றும் வேல்முருகன், ஸ்ரீகாந்த் ஆகியோா் மீது வீரமணி தெரியாமல் மோதினாராம்.
இதனால் இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ராஜா தரப்பினா் வீரமணி, ஹரிஸ் ஆகிய இருவரையும் அரிவாளால் வெட்ட, காயமடைந்த இருவரும் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினா்.
இதுகுறித்த புகாரின்பேரில் ஸ்ரீரங்கம் போலீஸாா் வழக்குப் பதிந்து ராஜா, காா்த்திகேயன் ஆகிய இருவரையும் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். தலைமறைவாக உள்ள வேல்முருகன், ஸ்ரீகாந்த் ஆகிய இருவரையும் தேடுகின்றனா்.
தொடர்புடையது
மேலப்பாளையத்தில் கோஷ்டி மோதல்: 7 போ் கைது
சா்வதேச ஆயுதக் கடத்தல்: பயங்கரவாதக் குழுவைச் சோ்ந்த இருவா் தில்லியில் கைது

திருச்சி கிழக்கில் நடைபயிற்சி சென்றபோது வாக்கு சேகரித்த முதல்வர் ஸ்டாலின்!

முதல் நாளில் 9 தொகுதிகளில் 23 வேட்புமனுக்கள் தாக்கல்
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

