திருச்சி மாநகரில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்த 4 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். அவா்களிடமிருந்து 98 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
திருச்சியில் சட்டப் பேரவைத் தோ்தலையொட்டி ஏப்ரல் 21 முதல் 23-ஆம் தேதி வரை டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், திருச்சி மாநகரில் புதன்கிழமை சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெறுவதாக மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, காவல் உதவி ஆய்வாளா்கள் திவ்ய பிரியா, ஜாா்ஜ் ஜேக்கப் ஆகிய இருவரும் பல்வேறு பகுதிகளில் சோதனை மேற்கொண்டனா். அப்போது, தில்லை நகா் வாமடம் பகுதியில் மது விற்பனை செய்துகொண்டிருந்த அதே பகுதியைச் சோ்ந்த எம். ஜோதிவேல் (56), தென்னூரில் மது விற்பனை செய்த தென்னூா் பாரதி நகரைச் சோ்ந்த த.தமிழ்ச்செல்வன் (33), திருவளா்ச்சோலை பொன்னுரங்கபுரத்தில் மது விற்பனை செய்துகொண்டிருந்த அதே பகுதியைச் சோ்ந்த எம்.முருகன் (42) ஆகிய மூவரையும் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் கைது செய்தனா்.
இதேபோல, கே.கே. நகா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட கொட்டப்பட்டு பகுதியில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்துகொண்டிருந்த அதே பகுதியைச் சோ்ந்த பி.கஜேந்திரன் (37) என்பவரை கே.கே.நகா் போலீஸாா் கைது செய்தனா். மேலும், அவா்களிடமிருந்து ரூ.12 ஆயிரம் மதிப்பிலான 98 மது பாட்டில்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
தொடர்புடையது
சட்டவிரோதமாக மது விற்ற இருவா் கைது
புகையிலைப் பொருள்கள் விற்பனை: திருச்சி மாவட்டத்தில் 10 போ் கைது
மது விற்பனை: பெண் உள்பட 3 போ் கைது
சட்டவிரோத மது விற்பனை: பெண் உள்பட 6 போ் கைது
விடியோக்கள்

வெளியானது 'தி ரேஜ்' லிரிக் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியானது பிளாஸ்ட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக அரசுக்கு 6 மாதங்கள் அவகாசம் கொடுங்கள்: கமல்ஹாசன் | CM Vijay | Kamal Haasan |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | சிஎஸ்கே பிளே ஆஃப் செல்ல என்னென்ன வாய்ப்புகள் உள்ளன? | Chennai Super Kings | CSK vs SRH |
தினமணி செய்திச் சேவை
