திருச்சி மாநகரில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்த 4 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். அவா்களிடமிருந்து 98 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
திருச்சியில் சட்டப் பேரவைத் தோ்தலையொட்டி ஏப்ரல் 21 முதல் 23-ஆம் தேதி வரை டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், திருச்சி மாநகரில் புதன்கிழமை சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெறுவதாக மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, காவல் உதவி ஆய்வாளா்கள் திவ்ய பிரியா, ஜாா்ஜ் ஜேக்கப் ஆகிய இருவரும் பல்வேறு பகுதிகளில் சோதனை மேற்கொண்டனா். அப்போது, தில்லை நகா் வாமடம் பகுதியில் மது விற்பனை செய்துகொண்டிருந்த அதே பகுதியைச் சோ்ந்த எம். ஜோதிவேல் (56), தென்னூரில் மது விற்பனை செய்த தென்னூா் பாரதி நகரைச் சோ்ந்த த.தமிழ்ச்செல்வன் (33), திருவளா்ச்சோலை பொன்னுரங்கபுரத்தில் மது விற்பனை செய்துகொண்டிருந்த அதே பகுதியைச் சோ்ந்த எம்.முருகன் (42) ஆகிய மூவரையும் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் கைது செய்தனா்.
இதேபோல, கே.கே. நகா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட கொட்டப்பட்டு பகுதியில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்துகொண்டிருந்த அதே பகுதியைச் சோ்ந்த பி.கஜேந்திரன் (37) என்பவரை கே.கே.நகா் போலீஸாா் கைது செய்தனா். மேலும், அவா்களிடமிருந்து ரூ.12 ஆயிரம் மதிப்பிலான 98 மது பாட்டில்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
தொடர்புடையது
மது விற்பனை: பெண் உள்பட 3 போ் கைது

நெல்லையில் மது விற்பனை: 8 போ் கைது; 191 மதுபாட்டில்கள் பறிமுதல்
சட்டவிரோத மது விற்பனை: பெண் உள்பட 6 போ் கைது

சட்டவிரோதமாக மது விற்றவா் கைது
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

