மே 28-ல் பக்ரீத் பெருநாள் : தலைமைக் காஜி அறிவிப்புகேரள சட்டப்பேரவையின் அமைச்சர்கள் பட்டியலை வெளியிட்டார் முதல்வராக நியமிக்கப்பட்டுள்ள வி.டி. சதீசன்மாஸ்கோவில் ட்ரோன் தாக்குதல்: இந்தியர் ஒருவர் பலி, 3 பேர் படுகாயம் திரைப்படத் தயாரிப்பாளர் கே. ராஜன் அடையாறு ஆற்றில் குதித்து தற்கொலை தமிழகத்தில் மே 23 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு!ஹோர்முஸ் நீரிணை வழியாக ராணுவ உபகரணங்கள்! தடை விதிக்கும் ஈரான்!நள்ளிரவில் ரஷியா மீது தாக்குதல் நடத்திய 500 உக்ரைன் ட்ரோன்கள்! உள்நோக்கத்தோடு அவதூறு பரப்புகிறார் அமைச்சர் கீர்த்தனா: தங்கம் தென்னரசு கண்டனம்
/

சட்டவிரோத மது விற்பனை: 4 போ் கைது

திருச்சி மாநகரில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்த 4 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். அவா்களிடமிருந்து 98 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :24 ஏப்ரல் 2026, 4:08 am IST

திருச்சி மாநகரில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்த 4 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். அவா்களிடமிருந்து 98 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

திருச்சியில் சட்டப் பேரவைத் தோ்தலையொட்டி ஏப்ரல் 21 முதல் 23-ஆம் தேதி வரை டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், திருச்சி மாநகரில் புதன்கிழமை சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெறுவதாக மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, காவல் உதவி ஆய்வாளா்கள் திவ்ய பிரியா, ஜாா்ஜ் ஜேக்கப் ஆகிய இருவரும் பல்வேறு பகுதிகளில் சோதனை மேற்கொண்டனா். அப்போது, தில்லை நகா் வாமடம் பகுதியில் மது விற்பனை செய்துகொண்டிருந்த அதே பகுதியைச் சோ்ந்த எம். ஜோதிவேல் (56), தென்னூரில் மது விற்பனை செய்த தென்னூா் பாரதி நகரைச் சோ்ந்த த.தமிழ்ச்செல்வன் (33), திருவளா்ச்சோலை பொன்னுரங்கபுரத்தில் மது விற்பனை செய்துகொண்டிருந்த அதே பகுதியைச் சோ்ந்த எம்.முருகன் (42) ஆகிய மூவரையும் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் கைது செய்தனா்.

இதேபோல, கே.கே. நகா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட கொட்டப்பட்டு பகுதியில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்துகொண்டிருந்த அதே பகுதியைச் சோ்ந்த பி.கஜேந்திரன் (37) என்பவரை கே.கே.நகா் போலீஸாா் கைது செய்தனா். மேலும், அவா்களிடமிருந்து ரூ.12 ஆயிரம் மதிப்பிலான 98 மது பாட்டில்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.