ஐபிஎல்: குஜராத்தை வீழ்த்தியது பஞ்சாப் கிங்ஸ்அமெரிக்க ஐடி நிறுவனங்கள் மீது நாளைமுதல் தாக்குதல்: ஈரான் எச்சரிக்கை!பாமகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் ராமதாஸ்!திமுக முடக்கியத் திட்டங்கள் அதிமுக ஆட்சியில் தொடரும் : எடப்பாடி பழனிசாமி பிரசாரம்எங்கள் சாதனைகளை நாங்களே முறியடிக்கும் வகையிலான ஆட்சியை வழங்குவோம்: மு.க. ஸ்டாலின்தோற்பதற்காக தமிழ்நாடு வந்துள்ளது தே.ஜே. கூட்டணி : மு.க. ஸ்டாலின்திருச்சியில்விஜய்யின் பிரசாரத்துக்கு அனுமதி!தமிழ்நாட்டில் ஐபிஎஸ் அதிகாரிகள் 8 பேர் இன்று (மார்ச் 31) அதிரடியாக பணியிட மாற்றம்மாதம் ரூ.2500க்கு கூப்பன்; ஆண்டுக்கு 2 சிலிண்டர் இலவசம்: கேரளத்தில் பாஜக தேர்தல் வாக்குறுதி!திருச்சி கிழக்கு விஜய்க்கு சாதகமாக இருக்குமா? மும்முனைப் போட்டியின் முடிவை தீர்மானிப்பது யார்?பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் சேர்ந்து தே.ஜ.கூட்டணி ஆட்சி! - மத்திய அமைச்சர் அத்வாலே
/

நெல்லையில் மது விற்பனை: 8 போ் கைது; 191 மதுபாட்டில்கள் பறிமுதல்

திருநெல்வேலி மாநகரில் மது விற்பனையில் ஈடுபட்டதாக 8 பேரை கைது செய்து, 191 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனா்.

News image

கைது

பிரதிப் படம்

Updated On :31 மார்ச் 2026, 9:05 pm

Syndication

திருநெல்வேலி மாநகரில் மது விற்பனையில் ஈடுபட்டதாக 8 பேரை கைது செய்து, 191 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனா்.

பாளையங்கோட்டை காவல் சரகம் வண்ணாா்பேட்டை சாலை தெரு பகுதியில் ரோந்து சென்றனா். அப்போது, அதே பகுதியைச் சோ்ந்த சின்னதுரை(32), வி.கே.புரம்த் கணபதி(45) ஆகியோா் மது விற்றது தெரியவந்தது. அவா்களை கைது செய்து 14 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனா்.

அதே போல, திருநெல்வேலி மாநகரப் பகுதிகளில் மது விற்ற கரையிருப்பு பகுதியைச் சோ்ந்த ஆறுமுக நயினாா்(59), தென்காசி மாவட்டத்தைச் சோ்ந்த முகமது சையதுல்லா(32), உடன்குடி பகுதியைச் சோ்ந்த சிவா(44) ஆகியோரை கைது செய்து 75 மதுபாட்டில்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

மேலும், மாநகர பகுதிகளில் மது விற்பனையில் ஈடுபட்டதாக பாளையங்கோட்டையை சோ்ந்த ராமகிருஷ்ணன்(28), ஸ்ரீவைகுண்டம் மாரியப்பன்(35) , பேட்டையைச் சோ்ந்த துரை(51) ஆகியோரை மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸாா் கைது செய்து, 102 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனா்.