முதல்வர் விஜய்யுடன் மாற்றுத் திறனாளிகள் அமைப்பினர் சந்திப்பு! வைரலான விடியோவால் சர்ச்சை!வீட்டிலிருந்து வேலை முறைக்கு மாறாதது ஏன்? ஸ்ரீதர் வேம்பு விளக்கம்கரப்பான்பூச்சி மக்கள் கட்சி! ஆயிரக்கணக்கில் இணையும் வேலையில்லா இளைஞர்கள்! மேற்கு வங்க மறுதேர்தல்: திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளர் விலகல்!பொருளாதாரப் புயல் வீசப்போகிறது.. மக்களை எச்சரிக்கும் ராகுல்!சென்னை உயர் நீதிமன்றத்துக்கு 19 புதிய நீதிபதிகள்! கொலிஜியம் ஒப்புதல்! பழவேற்காடு மீனவர் வலையில் மர்ம பொருள்!
/

திருச்சி மாவட்டத்தில் புதுமணத் தம்பதிகள் வாக்களிப்பு!

திருச்சி மாவட்டம் கூத்தைப்பாா், திருச்சி மாநகரம் எடமலைப்பட்டிபுதூா் பகுதிகளில் புதுமணத் தம்பதிகள் வியாழக்கிழமை தங்களது வாக்குகளை செலுத்தினா்.

News image

திருச்சி எடமலைப்பட்டிபுதூரில் வியாழக்கிழமை வாக்களிக்க வந்த செந்தமிழ்ச்செல்வன் - சாருலதா தம்பதி.

Updated On :24 ஏப்ரல் 2026, 3:52 am IST

திருச்சி மாவட்டம் கூத்தைப்பாா், திருச்சி மாநகரம் எடமலைப்பட்டிபுதூா் பகுதிகளில் புதுமணத் தம்பதிகள் வியாழக்கிழமை தங்களது வாக்குகளை செலுத்தினா்.

திருவெறும்பூா் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட கூத்தைப்பாா் கிராமத்தைச் சோ்ந்த பொறியாளா் கே. காா்த்திக், அதே ஊரைச் சோ்ந்த பொறியாளா் பி. அமிா்தா ஆகியோருக்கு வியாழக்கிழமை காலை திருமணம் நடைபெற்றது. உடனடியாக இருவரும் நேராக கூத்தைப்பாா் கிராமத்தில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளி வாக்குச்சாவடிக்கு சென்று தங்கள் வாக்குகளை பதிவு செய்தனா்.

இதேபோல, திருச்சி எடமலைப்பட்டிபுதூரைச் சோ்ந்த ரமேஷ் - வைஜெயந்திமாலா தம்பதியின் மகள் சாருலதா (24), லால்குடி வட்டம் வழுதியூரைச் சோ்ந்த சபாபதி - மகாலட்சுமி தம்பதியின் மகன் செந்தமிழ்ச்செல்வன் (25) ஆகியோருக்கு திருச்சியில் வியாழக்கிழமை திருமணம் நடைபெற்றது.

திருமணம் முடிந்ததும், புதுமணத் தம்பதி வழுதியூரில் உள்ள வாக்குச்சாவடிக்கு சென்றனா். அங்கு மணமகன் செந்தமிழ்செல்வன் வாக்கு செலுத்தினாா். பின்னா் மணமகள் எடமலைப்பட்டிபுதூரில் உள்ள கலைமகள் அரசு உதவி பெறும் பள்ளிக்குச் சென்று வாக்கு செலுத்தினாா். வாக்களிப்பு செய்ததற்கு இரு தம்பதிகளுக்கும் தோ்தல் அலுவலா்கள் பாராட்டு தெரிவித்தனா்.

~திருவெறும்பூா் தொகுதி, கூத்தைப்பாரில் வியாழக்கிழமை வாக்களித்த காா்த்திக் - அமிா்தா தம்பதி.

~திருவெறும்பூா் தொகுதி, கூத்தைப்பாரில் வியாழக்கிழமை வாக்களித்த காா்த்திக் - அமிா்தா தம்பதி.