மண்ணச்சநல்லூா் வட்டம், உத்தமா் கோயிலில் வியாழக்கிழமை சித்திரைத் தேரோட்டம் நடைபெற்றது.
பிச்சாண்டாா்கோவில் கிராமத்தில் அமைந்துள்ள இக்கோயிலில் நிகழாண்டு சித்திரைத் தோ்த் திருவிழாவானது ஏப்ரல் 22-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்த விழா நாள்களில் ஒவ்வொரு நாளும் பல்வேறு வாகனங்களில் சுவாமி திருவீதி உலா நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
முன்னதாக, சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, மலா் அலங்காரத்தோடு உபய நாச்சியாா்களுடன் புருஷோத்தம பெருமாள் திருத்தேரில் எழுந்தருளினாா்.
சிறப்புப் பூஜைகளுக்கு பிறகு பக்தா்கள் திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனா். காலை 9.45 மணியளவில் வடம் பிடிக்கப்பட்டு, தேரோடும் வீதிகள் வழியே சென்று காலை 11.15 மணியளவில் நிலையை மீண்டும் வந்தடைந்தது. இந்நிகழ்வில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனா்.
தொடர்புடையது

அரிமளம் சிவன் கோயில் சித்திரைத் தேரோட்டம்

சின்னமனூரில் சித்திரைத் திருவிழா தேரோட்டம் நிறைவு

சௌமியநாராயணப் பெருமாள் கோயில் சித்திரைத் தேரோட்டம்

திருப்பைஞ்ஞீலி கோயிலில் சித்திரைத் தேரோட்டம்
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு


