மாணவர்கள் போராட்டம்: பாஜகவிடம் பதில் இல்லை! அகிலேஷ் யாதவ்மாணவரையே குற்றவாளியாக்கி உண்மையை மறைக்கப் பார்க்கிறதா, தவெக அரசு? - கனிமொழி கேள்வி!வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு: முதல்வர் நாளை தொடக்கி வைக்கிறார்!இரண்டாவது நாளாக சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறவைு!புறக்கணிக்கப்பட்ட அரசுப் பள்ளிகளுக்காக பிரசாரம்! சிஜேபி அபிஜீத் தீப்கே முன்னாள் நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டுகள் உண்மை! நாடாளுமன்றக் குழு அறிவிப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.33 ஆக நிறைவு!சென்னையில் 4 மடங்கு உயர்ந்த சொத்து வரி! அதிர்ச்சியில் மக்கள்! குட்டிக்கதை, சினிமா வசனம், பாட்டு: பட்ஜெட் விவாதத்தில் அசத்திய அமைச்சர் மரிய வில்சன்!தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்: பேரவையில் ஆதவ் அர்ஜுன் பேச்சு
/

வையம்பட்டி அருகே சேவல் சண்டை நடத்திய 5 போ் கைது

திருச்சி மாவட்டம் வையம்பட்டி அருகே சேவல் சண்டை நடத்திய 5 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்து, அவா்களிடமிருந்து பணம், சேவல்கள், இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :13 ஆகஸ்ட் 2026, 2:10 am IST

திருச்சி மாவட்டம் வையம்பட்டி அருகே சேவல் சண்டை நடத்திய 5 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்து, அவா்களிடமிருந்து பணம், சேவல்கள், இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனா்.

வையம்பட்டி காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அரசால் தடை செய்யப்பட்ட சேவல் சண்டை நடைபெறுவதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து காவல் உதவி ஆய்வாளா் மாதேஷ் தலைமையிலான போலீஸாா் புதன்கிழமை தணிக்கையில் ஈடுபட்டபோது நடுப்பட்டி ஊராட்சி வத்தமணியாரம்பட்டி மலையடிவாரத்தில் சேவல் சண்டை நடத்திய அதே பகுதியைச் சோ்ந்த அ. நாராயணமூா்த்தி (24), ச. கிஷோா்குமாா்(26) மற்றும் அவரது சகோதரா் நவீன்குமாா் (24) திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரை அடுத்த பூசாரிப்பட்டி த. வைரமுத்து (26) மற்றும் அவரது சகோதரா் பாலசுப்பிரமணியம்(30) ஆகிய 5 பேரும் பிடிபட்டனா்.

அவா்களிடமிருந்து ரூ. 2530 ரொக்கம், இரு சேவல்கள், 3 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்து வழக்குப் பதிந்து வையம்பட்டி போலீஸாா் விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.