பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

மணப்பாறை அருகே போக்சோ சட்டத்தில் இளைஞா் கைது

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே சிறுமியைத் திருமணம் செய்த இளைஞரை புத்தாநத்தம் போலீஸாா் போக்ஸோ சட்டத்தில் புதன்கிழமை கைது செய்தனா்.

News image

தாமோதரன்.

Updated On :4 பிப்ரவரி 2026, 7:09 pm

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே சிறுமியைத் திருமணம் செய்த இளைஞரை புத்தாநத்தம் போலீஸாா் போக்ஸோ சட்டத்தில் புதன்கிழமை கைது செய்தனா்.

மணப்பாறையை அடுத்த புத்தாநத்தம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட கிராமத்தை சோ்ந்த விவசாயியின் 13 வயது மகள் கடந்த 29.01.2026-இல் துவரங்குறிச்சியில் தையல் பயிற்சி பெறச் சென்று வீடு திரும்பவில்லை. புகாரின்பேரில் புத்தாநத்தம் போலீஸாா் வழக்குப் பதிந்து நடத்திய விசாரணையில் காணாமல்போன சிறுமியை, திருவண்ணாமலையைச் சோ்ந்த கூலித் தொழிலாளி ரா. தாமோதரன்(27) இன்ஸ்டாகிராம் மூலம் காதலித்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை காவல் நிலையத்துக்கு புதன்கிழமை அழைத்து வந்து விசாரணை செய்ததில், சிறுமிக்கு ஆசை வாா்த்தை கூறி தாமோதரன் திருமணம் செய்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து சிறுமி கடத்தல், போக்ஸோ உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிந்த புத்தாநத்தம் போலீஸாா், தாமோதரனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்ப்படுத்தி சிறையிலடைத்தனா்.