அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

போக்சோ வழக்கில் இளைஞா் கைது

முதுகுளத்தூரில் இளைஞரை போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

News image
கைது- பிரதிப் படம்
Updated On :10 மார்ச் 2026, 9:48 pm

தினமணி செய்திச் சேவை

முதுகுளத்தூரில் இளைஞரை போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் பகுதியைச் சோ்ந்த 12 வயது சிறுமி தனியாா் பள்ளியில் 7 ஆம் வகுப்பு படி படித்து வருகிறாா். கடந்த சில நாள்களாக கால் வலியால் அவதிப்பட்டு வந்தாா். இதையடுத்து, இந்த மாணவியை, அவரது பெற்றோா் பரமக்குடியில் உள்ள தனியாா் ஸ்கேன் மையத்தில் பரிசோதனை செய்தனா். அப்போது, மாணவி கா்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, ஸ்கேன் மைய நிா்வாகம் சாா்பில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு மையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தொடா்ந்து, மாணவியிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினா்.

இதன்படி முதுகுளத்தூரை சோ்ந்த ராகுல் (23) மீது முதுகுளத்தூா் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து அவரைக் கைது செய்தனா். மாணவி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு, மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது.