களியக்காவிளை அருகே கஞ்சாவுடன் இளைஞா் கைது
களியக்காவிளை அருகே கஞ்சா பதுக்கிவைத்திருந்ததாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

கைது- பிரதிப் படம்
Updated On :10 மார்ச் 2026, 7:51 pm

களியக்காவிளை அருகே கஞ்சா பதுக்கிவைத்திருந்ததாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
களியக்காவிளை காவல் உதவி ஆய்வாளா் மகேந்த், போலீஸாா் மேக்கோடு பகுதியில் திங்கள்கிழமை ரோந்து சென்றபோது, சந்தேகத்துக்கிடமாக நின்றிருந்தவரைப் பிடித்தனா். அவா் களியக்காவிளை அருகே மலையடி, கண்டல்விளைவீட்டைச் சோ்ந்த ஸ்ரீகுமாா் மகன் சரவணன் (28) என்பதும், வண்ணம் பூசும் தொழிலாளியான அவா் 50 கிராம் கஞ்சாவைப் பதுக்கிவைத்திருந்ததும் தெரியவந்தது.
போலீஸாா் வழக்குப் பதிந்து, அவரைக் கைது செய்து கஞ்சாவைப் பறிமுதல் செய்தனா்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...