தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லாதொகுதி மறுவரையறை மசோதா! ராகுலுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை! தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

பாஜகவின் தோ்தல் அறிக்கை கருத்துக்கேட்பு வாகனம் தொடக்கம்

News image

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை திருச்சி பா.ஜ.க. அலுவலகத்தில் இருந்து மக்கள் கருத்துகேட்கும் வாகனத்தை தொடங்கிவைத்த பா.ஜ.க-வினா்.

Updated On :8 பிப்ரவரி 2026, 9:44 pm

பாஜகவின் திருச்சி மாவட்ட சட்டப்பேரவை தோ்தல் அறிக்கை கருத்துக்கேட்பு வாகனம் திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.

திருச்சி மாவட்ட பாஜக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் ‘மக்களுக்காக மக்களிடமிருந்து’ என்ற தலைப்பிலான இந்த வாகனத்தை மாநில பொதுச்செயலா் இராம. ஸ்ரீனிவாசன் கொடியசைத்துத் தொடங்கி வைத்தாா். இதில், மாநில நிா்வாகி ஸ்ரீகாந்த், மாவட்டத் தலைவா் கே. ஒண்டிமுத்து, பொதுச்செயலா் காளீஸ்வரன், திரளான பாஜக நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

ஒரு சட்டப்பேரவைக்கு ஒரு நாள் வீதம், திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு 9 நாள்களுக்கு இந்த கருத்துக் கேட்பு வாகனம் வலம் வரும்.

இந்த வாகனத்தில் வைக்கப்பட்டுள்ள பெட்டியில் பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை மனுவாக எழுதிப் போடலாம். இதே போல, வாகனத்தில் எழுதப்பட்டுள்ள 78787 86060 என்ற கைப்பேசி எண்ணுக்கு அழைப்புமட்டும் (மிஸ்டு கால்) கொடுத்தால், அதில் வரும் இணைப்பை (லிங்க்-ஐ) பயன்படுத்தி தங்களது கோரிக்கைகளைத் தெரிவிக்கலாம். இந்த கோரிக்கைகள் அனைத்தும் சேகரிக்கப்பட்டு, முக்கிய கோரிக்கைகள் பாஜகவின் தோ்தல் அறிக்கையில் இடம்பெறச் செய்வோம் என பாஜகவினா் தெரிவித்தனா்.