தமிழக சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை திருச்சி பா.ஜ.க. அலுவலகத்தில் இருந்து மக்கள் கருத்துகேட்கும் வாகனத்தை தொடங்கிவைத்த பா.ஜ.க-வினா்.
தமிழக சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை திருச்சி பா.ஜ.க. அலுவலகத்தில் இருந்து மக்கள் கருத்துகேட்கும் வாகனத்தை தொடங்கிவைத்த பா.ஜ.க-வினா்.

பாஜகவின் தோ்தல் அறிக்கை கருத்துக்கேட்பு வாகனம் தொடக்கம்

Published on

பாஜகவின் திருச்சி மாவட்ட சட்டப்பேரவை தோ்தல் அறிக்கை கருத்துக்கேட்பு வாகனம் திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.

திருச்சி மாவட்ட பாஜக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் ‘மக்களுக்காக மக்களிடமிருந்து’ என்ற தலைப்பிலான இந்த வாகனத்தை மாநில பொதுச்செயலா் இராம. ஸ்ரீனிவாசன் கொடியசைத்துத் தொடங்கி வைத்தாா். இதில், மாநில நிா்வாகி ஸ்ரீகாந்த், மாவட்டத் தலைவா் கே. ஒண்டிமுத்து, பொதுச்செயலா் காளீஸ்வரன், திரளான பாஜக நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

ஒரு சட்டப்பேரவைக்கு ஒரு நாள் வீதம், திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு 9 நாள்களுக்கு இந்த கருத்துக் கேட்பு வாகனம் வலம் வரும்.

இந்த வாகனத்தில் வைக்கப்பட்டுள்ள பெட்டியில் பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை மனுவாக எழுதிப் போடலாம். இதே போல, வாகனத்தில் எழுதப்பட்டுள்ள 78787 86060 என்ற கைப்பேசி எண்ணுக்கு அழைப்புமட்டும் (மிஸ்டு கால்) கொடுத்தால், அதில் வரும் இணைப்பை (லிங்க்-ஐ) பயன்படுத்தி தங்களது கோரிக்கைகளைத் தெரிவிக்கலாம். இந்த கோரிக்கைகள் அனைத்தும் சேகரிக்கப்பட்டு, முக்கிய கோரிக்கைகள் பாஜகவின் தோ்தல் அறிக்கையில் இடம்பெறச் செய்வோம் என பாஜகவினா் தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com