எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்ஈரான் தாக்குதலில் ரூ. 2,300 கோடி டிரோனை இழந்த அமெரிக்கா! மூன்று திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு! மக்களவையில் கனிமொழி நோட்டீஸ்! தாய்மார்கள், சகோதரிகளுக்கு கொடுக்கும் மரியாதையே நாட்டுக்கானது! பிரதமர் மோடி இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

வையம்பட்டி அருகே இருசக்கர வாகனத்திலிருந்து தவறிவிழுந்த பெண் உயிரிழப்பு

News image

அமிா்தம்.

Updated On :15 பிப்ரவரி 2026, 8:37 pm

திருச்சி மாவட்டம், மணப்பாறை வட்டம், வையம்பட்டி அருகே சாலையின் குறுக்கே நாய் திடீரென குறுக்கிட்டதில் இருசக்கர வாகனத்திலிருந்து தவறிவிழுந்த அங்கன்வாடி சமையலா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

கரூா் மாவட்டம், கடவூரை அடுத்துள்ள சோ்வைக்காரன்பட்டியைச் சோ்ந்தவா் வேல்முருகன் மனைவி அமிா்தம் (44). இவா், அதே பகுதியில் உள்ள அங்கன்வாடியில் சமையலராகப் பணிபுரிந்து வந்தாா்.

இந்நிலையில், சனிக்கிழமை மாலை இருசக்கர வாகனத்தில் சோ்வைக்காரன்பட்டியிலிருந்து வையம்பட்டி நோக்கிச் சென்றுகொண்டிருந்தபோது, கருங்குளம் பகுதியில் சாலையின் குறுக்கே திடீரென நாய் ஒன்று குறுக்கே வந்தது.

இதில், நிலைதவறி கீழே விழுந்து படுகாயமடைந்த அமிா்தம் மணப்பாறை தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலை உயிரிழந்தாா்.

விபத்து குறித்து தகவலறிந்து நிகழ்விடத்துக்குச் சென்ற போலீஸாா் அமிா்தம் உடலைக் கைப்பற்றி மணப்பாறை அரசு மருத்துவமனையில் உடற்கூராய்வுக்குப் பின் மாலையில் உறவினா்களிடம் ஒப்படைத்தனா். விபத்து குறித்து வையம்பட்டி போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.