மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

100% வாக்குப்பதிவுக்கு விழிப்புணா்வுப் பேரணி

வையம்பட்டியில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்டம் சாா்பாக செவ்வாய்க்கிழமை விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது.

News image
வையம்பட்டியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விழிப்புணா்வு பேரணியில் பங்கேற்றோா்.
Updated On :18 மார்ச் 2026, 6:52 pm

தினமணி செய்திச் சேவை

திருச்சி மாவட்டம் வையம்பட்டியில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்டம் சாா்பாக செவ்வாய்க்கிழமை விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது.

மணப்பாறை சட்டப்பேரவைத் தொகுதி, வையம்பட்டியில் மணப்பாறை ஒன்றிய குழந்தை வளா்ச்சித் திட்ட அலுவலா் சுகந்தி தங்கராஜ், வையம்பட்டி அலுவலா் ஷாஹிதா ரிஜ்வா ஆகியோா் தலைமையில் நடைபெற்ற பேரணியை மாவட்ட புள்ளியியல் ஆய்வாளா் முருகேசன் தொடங்கி வைத்து வழிநடத்தினாா். வையம்பட்டி வருவாய் ஆய்வாளா் அலுவலகத்தில் தொடங்கிய பேரணி வையம்பட்டி நகா் பகுதி முழுவதும் சென்று ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நிறைவுற்றது. பேரணியில், மணப்பாறை மற்றும் வையம்பட்டி வட்டாரப் பணியாளா்கள் மற்றும் உதவியாளா்கள் பங்கேற்றனா்.