மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்!

தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் மார்ச் 23 ஆம் தேதி நடைபெறவுள்ளது குறித்து...

News image
பிரேமலதா / தேமுதிக தலைமை அலுவலகம்- கோப்புப் படங்கள்
Updated On :18 மார்ச் 2026, 12:58 pm

இணையதளச் செய்திப் பிரிவு

தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் மார்ச் 23ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இது தொடர்பாக தேமுதிக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

’தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின், மாவட்ட கழக செயலாளர்கள் ஆலோசனை கூட்டம், பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் வரும் (23.03.2026) திங்கள் கிழமை காலை 10.00 மணியளவில் சென்னை கோயம்பேட்டில் உள்ள தலைமை அலுவலகத்தில் (கேப்டன் ஆலயம்) நடைபெறவுள்ளது.

இதில் அனைத்து மாவட்ட செயலாளர்களும் தவறாமல் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஏப்ரல் 23ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. தேர்தலையொட்டி திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் தேமுதிக இணைந்துள்ளது.

தேர்தல் நெருங்கிவருவதால், திமுக - தேமுதிக இடையே தொகுதிப் பங்கீடு குறித்து இறுதிக்கட்டப் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. ஏற்கெனவே ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்கப்பட்டுள்ள நிலையில், எத்தனை பேரவைத் தொகுதிகள் கேட்டுப் பெறுவது என்பது குறித்து மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஆலோசிக்கப்படவுள்ளதாகத் தெரிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.