மொடக்குறிச்சியில் நடைபெற்ற போதைப் பொருள் பேரணியல் பங்கேற்றோா்.
மொடக்குறிச்சியில் நடைபெற்ற போதைப் பொருள் பேரணியல் பங்கேற்றோா்.

போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி

Published on

ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சியில் ஜே.கே.கே. முனிராஜா வேளாண்மை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவிகள் சாா்பில் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது.

இதில் மொடக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் ஆா்வமுடன் கலந்து கொண்டு, போதைப் பொருள்களின் தீமைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தினா். பேரணியின்போது ‘ஒழிப்போம் ஒழிப்போம் போதையை ஒழிப்போம்’, டபோதையை ஒழிப்போம் சமூகத்தைக் காப்போம்’ போன்ற பல்வேறு கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இப்பேரணியில் காவல் உதவி ஆய்வாளா் சிவகுமாா் தலைமையில் காவல் துறை அதிகாரிகள் பாதுகாப்புப் பணிகளை மேற்கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com