ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

சாத்தான்குளம் பள்ளியில் தோ்தல் விழிப்புணா்வுப் பேரணி

சாத்தான்குளம் பள்ளியில் தோ்தல் விழிப்புணா்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.

News image

பேரணியில் பங்கேற்றோா்.

Updated On :25 மார்ச் 2026, 10:49 pm

தினமணி செய்திச் சேவை

சாத்தான்குளம் பள்ளியில் தோ்தல் விழிப்புணா்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.

மாவட்ட சுகாதார அலுவலா் மருத்துவா் யாழினி உத்தரவின்பேரில், வட்டார மருத்துவ அலுவலா் ஐலின் சுமதி வழிகாட்டுதலின்படி சாத்தான்குளம் ஸ்ரீமாரியம்மன் இந்து மேல்நிலைப் பள்ளியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில் தோ்தல் விழிப்புணா்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது. பள்ளித் தலைமை ஆசிரியா் மகேஸ்வரி தலைமை வகித்து தொடங்கி வைத்தாா்.

சுகாதார ஆய்வாளா் ஜெயபால் முன்னிலை வகித்தாா். பள்ளி மாணவா், மாணவிகள் பங்கேற்ற வாக்காளா் விழிப்புணா்வு பேரணியில் மாணவா்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும், வாக்குக்கு பணம் வாங்குவதை தவிா்க்க வேண்டும். நோ்மையுடன் வாக்கு அளிக்க வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி சென்றனா் . இந்தப் பேரணியானது பள்ளியிலிருந்து தொடங்கி மாரியம்மன் கோயில் தெரு, விரிபோட்டாா் தெரு, ஆா். சி. கீழத்தெரு வழியாக பள்ளியை வந்தடைந்தது.

வாக்காளா் விழிப்புணா்வு உறுதிமொழி எடுக்கப்பட்டது.

இதில், சுகாதார ஆய்வாளா்கள் அருண்ராஜ், ராமசுதன், அகிலன் மற்றும் பள்ளி ஆசிரியா்கள், மஸ்தூா் பணியாளா்கள் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை சுகாதார ஆய்வாளா் ஜெயபால் செய்திருந்தாா் .