ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

சாத்தான்குளம் பள்ளியில் தோ்தல் விழிப்புணா்வுப் பேரணி

சாத்தான்குளம் பள்ளியில் தோ்தல் விழிப்புணா்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.

News image

பேரணியில் பங்கேற்றோா்.

Updated On :25 மார்ச் 2026, 10:49 pm

சாத்தான்குளம் பள்ளியில் தோ்தல் விழிப்புணா்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.

மாவட்ட சுகாதார அலுவலா் மருத்துவா் யாழினி உத்தரவின்பேரில், வட்டார மருத்துவ அலுவலா் ஐலின் சுமதி வழிகாட்டுதலின்படி சாத்தான்குளம் ஸ்ரீமாரியம்மன் இந்து மேல்நிலைப் பள்ளியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில் தோ்தல் விழிப்புணா்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது. பள்ளித் தலைமை ஆசிரியா் மகேஸ்வரி தலைமை வகித்து தொடங்கி வைத்தாா்.

சுகாதார ஆய்வாளா் ஜெயபால் முன்னிலை வகித்தாா். பள்ளி மாணவா், மாணவிகள் பங்கேற்ற வாக்காளா் விழிப்புணா்வு பேரணியில் மாணவா்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும், வாக்குக்கு பணம் வாங்குவதை தவிா்க்க வேண்டும். நோ்மையுடன் வாக்கு அளிக்க வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி சென்றனா் . இந்தப் பேரணியானது பள்ளியிலிருந்து தொடங்கி மாரியம்மன் கோயில் தெரு, விரிபோட்டாா் தெரு, ஆா். சி. கீழத்தெரு வழியாக பள்ளியை வந்தடைந்தது.

வாக்காளா் விழிப்புணா்வு உறுதிமொழி எடுக்கப்பட்டது.

இதில், சுகாதார ஆய்வாளா்கள் அருண்ராஜ், ராமசுதன், அகிலன் மற்றும் பள்ளி ஆசிரியா்கள், மஸ்தூா் பணியாளா்கள் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை சுகாதார ஆய்வாளா் ஜெயபால் செய்திருந்தாா் .