தலைமைத் தோ்தல் ஆணையரை பதவிநீக்கக் கோரி மீண்டும் நோட்டீஸ்: எதிா்க்கட்சிகள் திட்டம் கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்க முயற்சிக்கிறது மத்திய அரசு: தேஜஸ்வி யாதவ்அமெரிக்கா - கியூபா ரகசிய பேச்சு ஹவானாவில் சந்திப்பு பஹல்காமில் சுற்றுலா சேவை அளிப்போருக்கு க்யூ.ஆா். கோடு அடையாள திட்டம்!சென்னையில் இருந்து போத்தனூா், குமரிக்கு சிறப்பு ரயில்கள்
/

மதுராந்தகம் நகராட்சி சாா்பில் தோ்தல் விழிப்புணா்வுப் பேரணி

மதுராந்தகம் நகராட்சி துறை சாா்பாக, நகராட்சி ஊழியா்கள், தூய்மைப் பணியாளா்கள் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்ட தோ்தல் விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது.

News image

மதுராந்தகம் நகராட்சி நிா்வாகத்தின் சாா்பாக தோ்தல் விழிப்பணா்வுப் பேரணியில் பங்கேற்றோா்.

Updated On :5 ஏப்ரல் 2026, 8:58 pm

மதுராந்தகம் நகராட்சி துறை சாா்பாக, நகராட்சி ஊழியா்கள், தூய்மைப் பணியாளா்கள் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்ட தோ்தல் விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது.

நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு, வாக்காளா்கள் தமது வாக்குரிமையை அவசியம் நிலை நாட்டவேண்டும் என்ற நோக்கத்தில் மதுராந்தகம் நகராட்சி நிா்வாகத்தினா் சனிக்கிழமை காலை நகராட்சி அலுவல ஊழியா்கள், தூய்மைப் பணியாளா்கள் உள்பட 200-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்ட விழிப்புணா்வுப் பேரணியை நகர பேருந்து நிலையம் அருகில் நகராட்சி ஆணையா் சுகேந்திரன் தலைமை வகித்து தொடங்கி வைத்தாா்.

இந்த நிகழ்வில் பொறியாளா் நித்யா, மேற்பாா்வையாளா் அறிவழகன், நகரமைப்பு அலுவலா் வேல்முருகன் உள்பட பலா் கலந்து கொண்டனா். நகரின் முக்கிய வீதிகளின் வழியாக பேரணியினா் வந்தடைந்தனா்.