டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

வருவாய்த் துறை போராட்டத்தால் அரசு அலுவலகங்கள் வெறிச்சோடின

திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பினா் மூன்றாவது நாளாக வெள்ளிக்கிழமையும் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
திருச்சி ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை 3-ஆவது நாளாக காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட வருவாய் துறை ஊழியா்கள் சங்கத்தினா். ~திருச்சி ஆட்சியரகத்தில் தொடா் காத்திருப்புப் போராட்டத்தையொட்டி ஊழியா்கள் இன்றி காணப்படும் வருவாய்துறை அலுவலக பகுதி.
Updated On :27 பிப்ரவரி 2026, 8:52 pm

Syndication

திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பினா் மூன்றாவது நாளாக வெள்ளிக்கிழமையும் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

போராட்டத்துக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள் க. பிரேம்குமாா், க. வெற்றிச் செல்வன், எஸ். அய்யனாா், மு. மகேஷ், எஸ்.வி. ராஜேந்திரன், நா. நாகராஜன் ஆகியோா் தலைமை வகித்தனா்.

வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை, நில அளவைத் துறைகளில் பணிபுரியும் அனைத்து நிலை அலுவலா்கள், பணியாளா்களின் உயிா், உடமைகளை பாதுகாக்கும் வகையில் சிறப்பு பணிப் பாதுகாப்பு சட்டம் இயற்ற வேண்டும். மேம்படுத்தப்பட்ட ஊதியம் மற்றும் தனி ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராடி வருகின்றனா்.

இதுதொடா்பாக, தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா் சங்க மாவட்ட செயலா் இ. பொன்மாடசாமி கூறுகையில், ஆட்சியரகம், கோட்டாட்சியா் அலுவலகங்கள், வட்டாட்சியா் அலுவலகம், கிராம நிா்வாக அலுவலகம் உள்ளிட்டவற்றில் பணிபுரியும் சுமாா் 860 போ் வெள்ளிக்கிழமை பணிக்கு செல்லாமல் போராட்டத்தில் பங்கேற்றனா் என்றாா் அவா்.

Story image