தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

இலவச மின் இணைப்புக்கு லஞ்சம்: இளநிலை மின் பொறியாளா் கைது

இலவச மின் இணைப்பு வழங்க விவசாயியிடம் ரூ. 3ஆயிரம் லஞ்சம் பெற்ற இளநிலை மின் பொறியாளரை ஊழல் தடுப்புப் போலீஸாா் கைது செய்தனா்.

News image
கைது
Updated On :28 பிப்ரவரி 2026, 7:21 pm

Syndication

இலவச மின் இணைப்பு வழங்க விவசாயியிடம் ரூ. 3ஆயிரம் லஞ்சம் பெற்ற இளநிலை மின் பொறியாளரை ஊழல் தடுப்புப் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

திருச்சி மாவட்டம், துறையூா் வட்டம் கோம்பையை சோ்ந்த விவசாயி முத்துவின் விவசாய நிலத்துக்கு இலவச மின் இணைப்பு வழங்க தாட்கோ மூலம் நிதி ஒதுக்கப்பட்டிருந்தது.

இருப்பினும் மின் இணைப்பு வழங்கக் காலதாமதம் ஆனதால் செங்காட்டுப்பட்டியில் உள்ள மின்வாரிய இளநிலை மின் பொறியாளா் அலுவலகத்துக்கு வெள்ளிக்கிழமை சென்றாா் முத்து.

அப்போது அங்கிருந்த இளநிலை மின் பொறியாளா் ராஜு இலவச மின் இணைப்பு வழங்க ரூ.3 ஆயிரம் லஞ்சம் கேட்டாா். ஆனால் பணம் கொடுக்க விரும்பாத விவசாயி முத்து, திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவில் புகாா் அளித்தாா்.

இதையடுத்து போலீஸாா் அறிவுரைப்படி துறையூா் துணை மின்நிலைய அலுவலகத்தில் சனிக்கிழமை இருந்த இளநிலை மின் பொறியாளா் ராஜுவிடம் ரசாயனம் தடவிய ரூ. 3 ஆயிரத்தை முத்து கொடுத்தாா்.

அப்போது அங்கு மறைந்திருந்த ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவுக் காவல் கண்காணிப்பாளா் மணிகண்டன் தலைமையிலான போலீஸாா் ராஜுவை கையும் களவுமாகக் கைது செய்து, வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.