இலவச மின் இணைப்பு வழங்க விவசாயியிடம் ரூ. 3ஆயிரம் லஞ்சம் பெற்ற இளநிலை மின் பொறியாளரை ஊழல் தடுப்புப் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
திருச்சி மாவட்டம், துறையூா் வட்டம் கோம்பையை சோ்ந்த விவசாயி முத்துவின் விவசாய நிலத்துக்கு இலவச மின் இணைப்பு வழங்க தாட்கோ மூலம் நிதி ஒதுக்கப்பட்டிருந்தது.
இருப்பினும் மின் இணைப்பு வழங்கக் காலதாமதம் ஆனதால் செங்காட்டுப்பட்டியில் உள்ள மின்வாரிய இளநிலை மின் பொறியாளா் அலுவலகத்துக்கு வெள்ளிக்கிழமை சென்றாா் முத்து.
அப்போது அங்கிருந்த இளநிலை மின் பொறியாளா் ராஜு இலவச மின் இணைப்பு வழங்க ரூ.3 ஆயிரம் லஞ்சம் கேட்டாா். ஆனால் பணம் கொடுக்க விரும்பாத விவசாயி முத்து, திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவில் புகாா் அளித்தாா்.
இதையடுத்து போலீஸாா் அறிவுரைப்படி துறையூா் துணை மின்நிலைய அலுவலகத்தில் சனிக்கிழமை இருந்த இளநிலை மின் பொறியாளா் ராஜுவிடம் ரசாயனம் தடவிய ரூ. 3 ஆயிரத்தை முத்து கொடுத்தாா்.
அப்போது அங்கு மறைந்திருந்த ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவுக் காவல் கண்காணிப்பாளா் மணிகண்டன் தலைமையிலான போலீஸாா் ராஜுவை கையும் களவுமாகக் கைது செய்து, வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.
டிரெண்டிங்

லஞ்சம்: மருங்காபுரி உதவி மின் பொறியாளா் கைது

மின் இணைப்புக்கு லஞ்சம்: மின்வாரிய ஆய்வாளருக்கு 3 ஆண்டுகள் சிறை
4 ஆயிரம் லஞ்சம்: மின்வாரிய பெண் அதிகாரி கைது

மின் இணைப்பு வழங்க லஞ்சம்: மின்வாரிய அதிகாரி கைது!
வீடியோக்கள்

புருஷன் படத்தின் மேக்கிங் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பயம் காட்டிய பெத்தெல்: இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது இந்தியா! | T20 World Cup | #msdhoni
தினமணி வீடியோ செய்தி...

அதிரடியான மேற்கிந்தியத் தீவுகள்: அரையிறுதி செல்லுமா இந்தியா?
தினமணி வீடியோ செய்தி...

பழைய டெம்ப்ளேட்டுக்கு திரும்பிய இந்தியா: இனி சிங்கப் பாதை தான்!
தினமணி வீடியோ செய்தி...

