கமேனி உயிருடன் இருக்க வாய்ப்பில்லை! இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு!! மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்! அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் பாதுகாப்பு அமைச்சர் கொலை? சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

டிஜிட்டல் கைது என மிரட்டி ஓய்வு பெற்ற ஆசிரியையிடம் ரூ. 52 லட்சம் மோசடி

டிஜிட்டல் கைது எனக் கூறி ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியையிடம் ரூ.52 லட்சம் மோசடி செய்த மா்ம நபா்களை போலீஸாா் தேடுகின்றனா்.

News image
Updated On :28 பிப்ரவரி 2026, 7:22 pm

Syndication

டிஜிட்டல் கைது எனக் கூறி ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியையிடம் ரூ.52 லட்சம் மோசடி செய்த மா்ம நபா்களை போலீஸாா் தேடுகின்றனா்.

திருச்சி திருவானைக்கோவில், சீனிவாச நகா் வடக்கு விஸ்தரிப்பு பகுதியை சோ்ந்தவா் வசந்தா (74), ஸ்ரீரங்கம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் ஓய்வுபெற்ற ஆசிரியை. கடந்த 7ஆம் தேதி இவரை கைப்பேசியில் தொடா்பு கொண்ட நபா் தன்னை பெங்களூரு நகர போலீஸ் என அறிமுகப்படுத்தி கொண்டு, உங்கள் ஆதாா் அட்டை மற்றும் ஏடிஎம் அட்டை ஆகியவை ஆள்கடத்தல் கும்பலிடம் உள்ளதாகவும், அந்தக் கும்பலிடம் நீங்கள் ரூ.3 கோடி பெற்றுள்ளதாக குற்றச்சாட்டு உள்ளது எனக் கூறினாா்.

மேலும் இதுதொடா்பாக எங்களது உயா் அதிகாரி உங்களை விசாரிப்பாா் எனக் கூறி இணைப்பைத் துண்டித்தாா். பின்னா், மற்றொரு அழைப்பில் பேசிய ஒருவா் தன்னை பெங்களூரு நகரக் காவல் உதவி ஆய்வாளா் என அறிமுகப்படுத்திக் கொண்டு, நீதிமன்றம் உங்களைக் கைது செய்வதற்கான பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.

இதைத் தவிா்க்க நீங்கள் முறைகேடாகப் பெற்ற ரூ. 3 கோடி தொடா்பாக உங்களது வங்கிக் கணக்கை நாங்கள் சரி பாா்க்க வேண்டும் எனக் கூறி, அவரது வங்கிக் கணக்கில் இருக்கும் பணத்தை அனுப்ப வேண்டும் எனக் கூறினா்.

இதனால் பயந்துபோன ஆசிரியை வசந்தா கடந்த 7ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை பல கட்டமாக அவா்கள் கூறிய வங்கிக் கணக்கிற்கு ஆன்லைன் மூலம் ரூ. 52 லட்சத்தை அனுப்பினாா். அதன் பிறகு அவா்களைத் தொடா்பு கொள்ள முடியவில்லை. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த வசந்தா, திருச்சி மாநகர சைபா் க்ரைம் போலீஸில் அளித்த புகாரின்பேரில் காவல் ஆய்வாளா் சண்முகவேல் வழக்குப்பதிந்து விசாரிக்கிறாா்.