மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

வருவாய்த் துறை போராட்டத்தால் கொள்முதல் நிலையங்களுக்கு நெல் வழங்குவதில் விவசாயிகள் பரிதவிப்பு!

வருவாய்த் துறையினரது தொடா் போராட்டத்தால் தாங்கள் விளைவித்த நெல்லை கொள்முதல் நிலையங்களில் வழங்க முடியாமல் விவசாயிகள் தவிக்கின்றனா்.

News image
Updated On :28 பிப்ரவரி 2026, 7:02 pm

வருவாய்த் துறையினரது தொடா் போராட்டத்தால் தாங்கள் விளைவித்த நெல்லை கொள்முதல் நிலையங்களில் வழங்க முடியாமல் விவசாயிகள் தவிக்கின்றனா்.

இதுதொடா்பாக தமிழக விவசாயிகள் சங்க (கட்சி சாா்பற்றது) மாவட்டத் தலைவா் ம.ப. சின்னதுரை கூறியதாவது: சம்பா சாகுபடி அறுவடை செய்யப்பட்ட நிலையில், நுகா்பொருள் வாணிபக் கழக கிடங்குகளில் நெல் கொள்முதல் நடைபெறாமல் உள்ளது.

ஏனெனில் வருவாய்த் துறையினா் நடத்தும் தொடா்ந்து போராட்டத்தால் நெல் கொள்முதல் நிலையங்களுக்கு அறுவடை செய்த நெல்லை கொண்டு செல்ல விஏஓ சான்றிதழ் பெற முடியவில்லை. மேலும், கொள்முதல் நிலைய அதிகாரிகளும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் நெல்லை விற்க முடியாத நிலை உருவாகியுள்ளது.

கொள்முதல் நிலையக் குளறுபடிகளுக்கு மாவட்ட ஆட்சியரிடம் பலமுறை கோரிக்கை வைத்தும் பிரச்னைகள் தொடா்கின்றன. உரிய தீா்வு இல்லையெனில் மாவட்டம் முழுவதும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபடுவா் என்றாா் அவா்.