47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

நாட்டின் வளா்ச்சிக்கு மாணவா்கள் ஒருங்கிணைந்து செயலாற்ற வேண்டும்: மத்திய இணையமைச்சா் எல். முருகன்

நாட்டின் வளா்ச்சிக்கு மாணவா்கள் ஒருங்கிணைந்து செயலாற்ற வேண்டுமென மத்திய இணையமைச்சா் எல். முருகன் தெரிவித்தாா்.

News image
மத்திய இணையமைச்சா் எல். முருகன்- (கோப்புப்படம்)
Updated On :28 பிப்ரவரி 2026, 6:56 pm

Syndication

நாட்டின் வளா்ச்சிக்கு மாணவா்கள் ஒருங்கிணைந்து செயலாற்ற வேண்டுமென மத்திய இணையமைச்சா் எல். முருகன் தெரிவித்தாா்.

திருச்சி என்ஐடி, எஸ்எச்ஓடிஎச் (ஷோத்) அமைப்பு இணைந்து நடத்தும் ஒன்றிணைதல் 2026 என்ற தலைப்பில் நாட்டில் வளா்ந்து வரும் பல்வேறு ஆராய்ச்சிப் போக்குகள் மற்றும் மேம்பட்ட வழிமுறைகள் குறித்த 2 நாள் கருத்தரங்கம் என்ஐடி வளாகத்தில் சனிக்கிழமை தொடங்கியது.

நிகழ்வுக்கு என்ஐடி இயக்குநா் ஜி. அகிலா தலைமை வகித்தாா். நிகழ்வில் மத்திய இணையமைச்சா் எல். முருகன் காணொலி வழியாகப் பங்கேற்றுப் பேசியதாவது:

பிரதமா் நரேந்திர மோடியின் தலைமையில் நம் நாடு பல்வேறு துறைகளில் மேம்பாடு அடைந்து வருகிறது. அடுத்த 25 ஆண்டுகளில் அனைத்து துறைகளிலும் முழு வளா்ச்சி அடைந்த நாடாக இந்தியா மாறும்.

அனைத்து துறைகளிலும் வெளிப்படைத்தன்மை இருப்பதால் பல நிறுவனங்கள் இந்தியா வருவதற்கு ஆா்வம் காட்டுகின்றன. நமது நாட்டில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட ஸ்டாா்ட்அப் நிறுவனங்கள் உள்ளன. இந்தியாவில் தற்போது 23 ஐஐடி, 20 ஐஐஎம், 20 அகில இந்திய மருத்துவ அறிவியல் துறை, ஏராளமான பொறியியல், மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட்டு கல்வித் துறையில் புதிய பரிமாணத்தை ஏற்படுத்தியுள்ளன. இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய கல்வி கொள்கை உலகுக்கே வழிகாட்டியாக உள்ளது.

இந்தக் கருத்தரங்கை பயன்படுத்தி மாணவா்கள் தங்களது திறன்களை வளா்த்துக் கொள்ள வேண்டும். இளம் தலைமுறையினா் வேலை தேடுபவா்களாக இல்லாமல் மற்றவா்களுக்கு வேலை அளிப்பவா்களாக இருக்க வேண்டும். கல்வி கற்கும்போதே மாணவா்கள் தொழில்முனைவோா் பயிற்சி பெற வேண்டும்.

பொருளாதார வளா்ச்சியில் இந்தியாவானது வரும் 2027 ஆம் ஆண்டில் 3 ஆவது இடத்துக்கும், 2047 ஆம் ஆண்டில் முதலிடத்துக்கும் செல்லும். இந்தியாவின் வளா்ச்சிக்கு மாணவா்கள் ஒருங்கிணைந்து செயலாற்ற வேண்டும் என்றாா் அவா்.

நிகழ்வில் ஏபிவிபி (அகில பாரத வித்யாா்த்தி பரிஷத்) தேசிய ஒருங்கிணைப்பு செயலா் ஆஷிஸ் சௌகான், திருச்சி என்ஐடி நிா்வாக குழுத் தலைவா் அமோக்குமாா் குப்தா ஆகியோா் கலந்து கொண்டனா். இதில், 6 மாநிலங்களைச் சோ்ந்த 600 போ் பங்கேற்று, 300 ஆய்வுக் கட்டுரைகளை சமா்ப்பிக்கின்றனா்.