வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 824 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது 5 மாநில தேர்தல்களில் மொத்தம் 17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு! ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

புத்தனாம்பட்டி கல்லூரியில் 645 பேருக்கு மடிக்கணினி

துறையூா் அருகே புத்தனாம்பட்டி நேரு நினைவுக் கல்லூரியில் பயிலும் 645 மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினி புதன்கிழமை வழங்கப்பட்டது.

News image
Updated On :7 ஜனவரி 2026, 7:24 pm

தினமணி செய்திச் சேவை

துறையூா் அருகே புத்தனாம்பட்டி நேரு நினைவுக் கல்லூரியில் பயிலும் 645 மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினி புதன்கிழமை வழங்கப்பட்டது.

மாவட்ட ஆட்சியா் வே. சரவணன் தலைமை வைத்தாா். எம்எல்ஏக்கள் ந. தியாகராஜன்(முசிறி), செ. ஸ்டாலின்குமாா்(துறையூா்) உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். கல்லூரிக் குழுத் தலைவா் பொன். பாலசுப்பிரமணியன், செயலா் பொன் ரவிசந்திரன் உள்ளிட்டோா் பேசினா். சிறப்பு அழைப்பாளராக அமைச்சா் கே.என். நேரு பங்கேற்று 645 பேருக்கு இலவச மடிக்கணினிகளை வழங்கிப் பேசினாா். நிகழ்வில் கல்லூரிப் பொருளாளா் சூா்யா, ஒருங்கிணைப்பாளா் மீனாட்சிசுந்தரம் உள்ளிட்டோா் பங்கேற்றனா். கல்லூரி முதல்வா் வெங்கடேசன் வரவேற்றாா். துணை முதல்வா் தமிழ்மணி நன்றி கூறினாா்.