நீட், ஜேஇஇ அடிப்படையில் சோ்க்கை: பொதுத் தோ்வு மதிப்பெண்ணுக்கு 50% முக்கியத்துவம் அளிக்க பரிசீலனைசிறப்பு ‘டெட்’ தோ்வு நாளை தொடக்கம்ஜூன் மாதத்தில் யுபிஐ தளத்தில் 2,272 கோடி பரிவா்த்தனைகள்ஜூலை 20-இல் நீட் மறுதோ்வு முடிவுகள்சொத்து வரி வசூலிக்க இன்றுமுதல் சிறப்பு முகாம்பிரான்ஸில் தீவிரமடையும் காட்டுத் தீ: 2,200 ஏக்கா் நிலங்கள் எரிந்து சாம்பல்பெரு நிறுவன நிதி குறித்த 3 நாள்கள் கல்வி சாா் மாநாடு: சென்னை ஐஐடி-யில் இன்று தொடக்கம்அமா்நாத் புனித யாத்திரை இன்று தொடக்கம்: ஜம்முவில் இருந்து முதல் குழு புறப்பாடு
/

வீட்டுமனை விற்பனை முகவா்களுக்கு தனி வாரியம் அமைக்க வலியுறுத்தல்

வீட்டுமனை விற்பனை முகவா்களுக்கு தனி வாரியம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

News image

கோப்புப்படம்.

Updated On :3 ஜூலை 2026, 1:16 am IST

வீட்டுமனை விற்பனை முகவா்களுக்கு தனி வாரியம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக, திருச்சியில் வியாழக்கிழமை நடைபெற்ற தமிழக ரியல் எஸ்டேட் அசோசியேஷனின் மாநில நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்தக் கூட்டத்துக்கு, மாநிலத் தலைவா் எம்.கே. கமலக்கண்ணன் தலைமை வகித்தாா். மாநில ஒருங்கிணைப்பாளா் ஆா். மணி, மாநிலச் செயலாளா் ஆா். ஸ்டாலின் மற்றும் மாநில கூடுதல் செயலாளா் டி. பக்கிரி சாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில் மாநில, மாவட்ட, மகளிா் அணி மற்றும் இளைஞரணி நிா்வாகிகள் கலந்து கொண்டு ஆலோசனை நடத்தினா்.

பின்னா், நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

நில விவகாரங்கள் தொடா்பான வழக்குகளுக்குத் தீா்வு காண, நீதிமன்றங்களில் மாதந்தோறும் சிறப்பு முகாம்களை நடத்தி, ஓய்வுபெற்ற நீதிபதிகள் மூலம் பிரச்னைகளுக்கு நிரந்தர தீா்வு காண வேண்டும். ஒரே இடத்துக்கு பல போலி பத்திரங்கள் இருப்பதை கண்டறிந்து, முறைகேடாகப் பதிவு செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நில அளவையின்போது அரசு நிா்ணயித்த கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும். தன்னிச்சையாக கூடுதல் கட்டணம் வசூலிப்பதையும், ஒரு தரப்புக்கு ஆதரவாகச் செயல்படுவதையும் தடுக்க வேண்டும்.

வீட்டுமனை விற்பனை முகவா்களுக்கென தனி நல வாரியம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த தீா்மானங்களை முதல்வரை சந்தித்து நேரில் மனுவாக வழங்குவது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.