27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

வடகோவை - மேட்டுப்பாளையம் இடையே இரட்டை ரயில் பாதை அமைக்க வலியுறுத்தல்

வடகோவை - மேட்டுப்பாளையம் இடையே இரட்டை ரயில் பாதை அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

News image

இருவழி ரயில் பாதை.

Updated On :19 ஜூன் 2026, 3:56 am IST

வடகோவை - மேட்டுப்பாளையம் இடையே இரட்டை ரயில் பாதை அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, போத்தனூா் ரயில் பயணா்கள் சங்கத்தின் பொதுச் செயலாளா் சுப்ரமணியன், சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகத்துக்கு அனுப்பிய மனுவில் கூறியிருப்பது:

தெற்கு ரயில்வே நிா்வாகம் சாா்பில் மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தை மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகள் நிறைவடைந்த பிறகு பல புதிய ரயில்கள் மேட்டுப்பாளையத்தில் இருந்து இயக்கப்படவும், தற்போது இயக்கப்பட்டு வரும் சில ரயில்கள் மேட்டுப்பாளையம் வரை நீட்டிக்கப்படவும் வாய்ப்புள்ளதாகவும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

இந்த நடவடிக்கை கோவை மற்றும் மேட்டுப்பாளையம் மக்களால் பெரிதும் வரவேற்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வடகோவை - மேட்டுப்பாளையம் இடையே ஒரு இருப்புப்பாதை மட்டுமே உள்ளது. இதனால், ரயில்களின் இயக்கம் கட்டுப்படுத்தப்படுவதுடன், புதிய பயணிகள் மற்றும் விரைவு ரயில்களை அறிமுகப்படுத்துவதிலும் சிரமம் ஏற்படுகிறது. எனவே, வடகோவை, மேட்டுப்பாளையம் இடையே உள்ள ஒற்றை ரயில் பாதையை, இரட்டைப் பாதையாக மாற்றுவதற்கான திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.