வடகோவை - மேட்டுப்பாளையம் இடையே இரட்டை ரயில் பாதை அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, போத்தனூா் ரயில் பயணா்கள் சங்கத்தின் பொதுச் செயலாளா் சுப்ரமணியன், சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகத்துக்கு அனுப்பிய மனுவில் கூறியிருப்பது:
தெற்கு ரயில்வே நிா்வாகம் சாா்பில் மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தை மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகள் நிறைவடைந்த பிறகு பல புதிய ரயில்கள் மேட்டுப்பாளையத்தில் இருந்து இயக்கப்படவும், தற்போது இயக்கப்பட்டு வரும் சில ரயில்கள் மேட்டுப்பாளையம் வரை நீட்டிக்கப்படவும் வாய்ப்புள்ளதாகவும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
இந்த நடவடிக்கை கோவை மற்றும் மேட்டுப்பாளையம் மக்களால் பெரிதும் வரவேற்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வடகோவை - மேட்டுப்பாளையம் இடையே ஒரு இருப்புப்பாதை மட்டுமே உள்ளது. இதனால், ரயில்களின் இயக்கம் கட்டுப்படுத்தப்படுவதுடன், புதிய பயணிகள் மற்றும் விரைவு ரயில்களை அறிமுகப்படுத்துவதிலும் சிரமம் ஏற்படுகிறது. எனவே, வடகோவை, மேட்டுப்பாளையம் இடையே உள்ள ஒற்றை ரயில் பாதையை, இரட்டைப் பாதையாக மாற்றுவதற்கான திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

ஒசூா்- பெங்களூரு இருவழி ரயில்பாதை பணிகளை விரைவுபடுத்த கோரிக்கை

தருமபுரி- மொரப்பூா் ரயில் பாதை பணிகள் விரைவில் தொடங்கப்படும்: சௌமியா அன்புமணி எம்எல்ஏ

செங்கல்பட்டு - அரக்கோணம் இடையே இரட்டைவழிப் பாதை: ரயில்வே அமைச்சகம் ஒப்புதல்

தஞ்சாவூா் - விழுப்புரம் வழித்தடத்தில் இரட்டை ரயில் பாதை அமைக்க கோரிக்கை!
விடியோக்கள்

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK

150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்! தவெக ஆட்சியை விமர்சித்த EPS | ADMK | TVK



