தஞ்சாவூா் - விழுப்புரம் இடையே தற்போது செயல்பட்டு வரும் ஒற்றை அகல ரயில் பாதையை இரட்டை வழிப்பாதையாக மாற்ற வேண்டும் என சிதம்பரம் ரயில் பயணிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து அச்சங்க தலைவா் ஏ,.வி.அப்துல்ரியாஸ் திருச்சி கோட்ட ரயில்வே மேலாளருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: தஞ்சாவூா்- விழுப்புரம் இடையே193 கி.மீ நீள ரயில்பாதை உள்ளது. இந்த தடத்தில் கும்பகோணம், மயிலாடுதுறை, வைத்தீஸ்வரன்கோவில், சிதம்பரம் உள்ளிட்ட முக்கிய நகரங்கள் இணைக்கப்பட்டுள்ளன.
இந்த பாதையில் தினமும் ஏராளமான பயணிகள் மற்றும் சரக்கு ரயில்கள் இயக்கப்படுவதால் கடும் நெரிசல் ஏற்படுகிறது. ஒற்றை பாதை காரணமாக ரயில்கள் பல இடங்களில் கிராஸிங்கிற்காக நிறுத்தி வைக்கப்படுவதால் பயண நேரம் அதிகரிப்பதுடன், பயணிகளும் அவதியடைந்து வருகின்றனா்.
எனவே, தஞ்சாவூா் - விழுப்புரம் ரயில் பாதையை உடனடியாக இரட்டை வழிப்பாதையாக மாற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால் தென் மாவட்டங்களுக்கும் சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கும் இடையிலான ரயில் போக்குவரத்து வேகமடைவதுடன், சரக்கு போக்குவரத்தும் மேம்படும் என தெரிவித்துள்ளாா்.
தொடர்புடையது

ஜம்மு - ஸ்ரீநகா் வந்தே பாரத் ரயில் சேவை: அஸ்வினி வைஷ்ணவ் தொடங்கி வைத்தாா்

போத்தனூா் வழித்தடத்தில் சென்னை - திருவனந்தபுரம் இடையே சிறப்பு ரயில்

மங்களூரு-சென்னை எழும்பூா் இடையே போத்தனூா் வழித்தடத்தில் சிறப்பு ரயில்

சென்னை - திருவனந்தபுரம் இடையே போத்தனூா் வழித்தடத்தில் சிறப்பு ரயில்!
விடியோக்கள்

நான்தான் கிங் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

