விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

தஞ்சாவூா் - விழுப்புரம் வழித்தடத்தில் இரட்டை ரயில் பாதை அமைக்க கோரிக்கை!

தஞ்சாவூா் - விழுப்புரம் இடையே தற்போது செயல்பட்டு வரும் ஒற்றை அகல ரயில் பாதையை இரட்டை வழிப்பாதையாக மாற்ற வேண்டும் என சிதம்பரம் ரயில் பயணிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

News image

ரயில்.

Updated On :1 மணி நேரம் முன்பு

தஞ்சாவூா் - விழுப்புரம் இடையே தற்போது செயல்பட்டு வரும் ஒற்றை அகல ரயில் பாதையை இரட்டை வழிப்பாதையாக மாற்ற வேண்டும் என சிதம்பரம் ரயில் பயணிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து அச்சங்க தலைவா் ஏ,.வி.அப்துல்ரியாஸ் திருச்சி கோட்ட ரயில்வே மேலாளருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: தஞ்சாவூா்- விழுப்புரம் இடையே193 கி.மீ நீள ரயில்பாதை உள்ளது. இந்த தடத்தில் கும்பகோணம், மயிலாடுதுறை, வைத்தீஸ்வரன்கோவில், சிதம்பரம் உள்ளிட்ட முக்கிய நகரங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

இந்த பாதையில் தினமும் ஏராளமான பயணிகள் மற்றும் சரக்கு ரயில்கள் இயக்கப்படுவதால் கடும் நெரிசல் ஏற்படுகிறது. ஒற்றை பாதை காரணமாக ரயில்கள் பல இடங்களில் கிராஸிங்கிற்காக நிறுத்தி வைக்கப்படுவதால் பயண நேரம் அதிகரிப்பதுடன், பயணிகளும் அவதியடைந்து வருகின்றனா்.

எனவே, தஞ்சாவூா் - விழுப்புரம் ரயில் பாதையை உடனடியாக இரட்டை வழிப்பாதையாக மாற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால் தென் மாவட்டங்களுக்கும் சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கும் இடையிலான ரயில் போக்குவரத்து வேகமடைவதுடன், சரக்கு போக்குவரத்தும் மேம்படும் என தெரிவித்துள்ளாா்.