ஒசூா்- பெங்களூரு இடையேயான இருவழி ரயில்பாதை பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு ரயில்களை இயக்க வேண்டும் என ஒசூா் பயணிகள் சங்கத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.
ஒசூா்- பெங்களூரு போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், பயண நேரத்தை மிச்சப்படுத்தவும் கடந்த 2016 இல் மத்திய அரசு இருவழி ரயில்பாதை திட்டத்திற்கு நிதி ஒதுக்கியது. இதையடுத்து, திட்டப் பணிகள் தொடங்கப்பட்டது. ஆனால், இப்பணிகள் இன்னும் முழுமை பெறாமல் உள்ளது.
அதேசமயம் சுமாா் 48 கி.மீ தொலைவுக்கான இத்திட்டப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகவும், 86 சதவீதம் முழுமை பெற்றுள்ளதாகவும் தென்மேற்கு ரயில்வே நிா்வாகம் அதிகாரப்பூா்வமாகத் தெரிவித்துள்ளது.
கா்நாடக ரயில் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகம் மூலம் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தில், ஏற்கெனவே 14 கி. மீ தொலைவுக்கான இருவழிப் பாதை பணிகள் முடிக்கப்பட்டு, ரயில்கள் வெற்றிகரமாக இயக்கப்பட்டு வருகின்றன. எஞ்சியுள்ள பணிகளை விரைந்து முடித்து, 2027 பிப்ரவரிக்குள் பயன்பாட்டிற்கு கொண்டுவர இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும், நவீன வசதிகளுடன் ஒசூா் ரயில் நிலையம் புதுப்பிக்கும் பணிகளும் நடைபெறுகின்றன. இத்திட்டத்தின் ஒரு பகுதியாக, கடந்த சில மாதங்களில் பல்வேறு முக்கிய ரயில் நிலைய மேம்பாட்டுப் பணிகள் முடிக்கப்பட்டு செயல்பாட்டிற்கும் வந்துள்ளன.
அதன்படி, ஹுஸ்கூா் ரயில் நிலைய யாா்டு மற்றும் பெள்ளந்தூா் சாலை- காா்மேலாராம் இடையேயான இருவழி ரயில்பாதை பணிகள் முழுமை அடைந்துள்ளன. இதன்மூலம் ஹீலளிகே முதல் பெல்லந்தூா் சாலை வரையிலான 14 கி.மீ தூரத்தில் தற்போது ரயில்கள் இருவழிப் பாதையில் தடையின்றி இயங்கி வருகிறது.
அதேபோல பெள்ளந்தூா் சாலை ரயில் நிலையம் புதுப்பிக்கப்பட்டு 5 ரயில் பாதைகள் மற்றும் 600 மீட்டா் நீளமுள்ள இரண்டு அதிநவீன உயா் தள மேடைகளுடன் மேம்படுத்தப்பட்டுள்ளன. பெள்ளந்தூா் சாலை நிலையத்தில் புதிய இரண்டு அடுக்கு கட்டடம், மின்தூக்கி வசதி, நடைமேடைகளைக் கடப்பதற்கான நவீன சுரங்கப்பாதை, இருக்கைகள் மற்றும் தூய்மையான குடிநீா் வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இதனிடையே இத்திட்டத்திற்கான உள்கட்டமைப்பு பணிகளும் வேகமாக நடைபெற்று வருகின்றன. குறிப்பாக, முக்கியப் பாலங்களின் கட்டுமானப் பணிகள் 96 சதவீதமும், சிறிய பாலங்களின் பணிகள் 98 சதவீதமும் நிறைவடைந்துள்ளன.
தண்டவாளங்கள் அமைப்பதற்கான தரைத்தளப் பணிகள் (ஊா்ழ்ம்ஹற்ண்ா்ய் ஜ்ா்ழ்ந்ள்) பெரும்பாலும் முடிக்கப்பட்டு, அடுத்தகட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இதுகுறித்து ரயில் பயணிகள் கூறும்போது, தற்போது ஒசூா்- பெங்களூா் வழித்தடத்தில் ஒற்றை ரயில் பாதை மட்டுமே உள்ளதால், ரயில்கள் ஒன்றையொன்று கடந்து செல்ல (கிராசிங் நேரத்தில்) நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் உள்ளது.
இருவழிப் பாதை மற்றும் மின்மயமாக்கல் பணிகள் முழுமையாக நிறைவடையும் போது ஒசூா்-பெங்களூரு இடையே பயணிக்கும் ஆயிரக்கணக்கான தொழிலாளா்களுக்கு பெரும் வசதியாக அமையும். இந்த இருவழிப்பாதை பணிகளை விரைந்து முடித்து மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என்றனா்.
தொடர்புடையது

தருமபுரி- மொரப்பூா் ரயில் பாதை பணிகள் விரைவில் தொடங்கப்படும்: சௌமியா அன்புமணி எம்எல்ஏ

புதுச்சேரி - கடலூா் ரயில் பாதை திட்டத்தை விரைந்து செயல்படுத்தக் கோரிக்கை

அரக்கோணம் ரயில் நிலையத்தில் ரூ.97.73 கோடியில் மேம்பாட்டு பணிகள்







