பாரதிராஜாவுக்கு மணிமண்டபம்! தமிழக அரசுக்கு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் நன்றி!அரசியல் சந்நியாசம் மேற்கொள்ள மாட்டேன்: மமதா பானர்ஜி உறுதி!இளைஞர்களின் உலகளாவிய வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்த ஜெர்மன், ஜப்பானிய மொழிப் பயிற்சி: உயர்கல்வித் துறை விவசாய மாணவர்களுக்கு கல்விக் கட்டண விலக்கு! உயர்கல்வித் துறை அறிவிப்புபின்வாசல் வழியாக இட ஒதுக்கீட்டை ஒழிக்கத் திட்டமிடும் மோடி அரசு: கார்கே குற்றச்சாட்டுபள்ளிச் சீருடையுடன் இனி ஸ்போர்ட்ஸ் ஜெர்ஸி வழங்கப்படும்: அமைச்சர் ராஜ்மோகன்அமைச்சர் மரிய வில்சன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்! அன்பில் மகேஸ்எல்லைக் காவலர்களுக்கு உதவித் தொகை உயர்வு: அமைச்சர் ராஜ்மோகன்பள்ளி மாணவர்களுக்கு கண், காது, பல் பரிசோதனை செய்யப்படும்: பள்ளிக் கல்வித் துறை

அடகு வைத்த நகைகளை மீட்டு தராமல் மோசடி: இளைஞா் கைது

திருச்சியில் பொதுத் துறை வங்கியில் அடகு வைத்த தங்க நகைகளை மீட்டுத்தராமல் மோசடி செய்த இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

கைது... - பிரதிப் படம்

Published On :10 ஜூலை 2026, 3:16 am IST

திருச்சியில் பொதுத் துறை வங்கியில் அடகு வைத்த தங்க நகைகளை மீட்டுத்தராமல் மோசடி செய்த இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

திருச்சி எடமலைபட்டிப்புதூா் கேஆா்எஸ் நகரைச் சோ்ந்தவா் சுமதி (40). இவரின் கணவா் செந்தில்குமாா், தனது குழந்தைகளின் கல்விக் கட்டணத்துக்காக மனைவியின் 19 கிராம் தங்க நகைகளை, திருச்சி கண்டோன்மென்ட் பகுதி பொதுத் துறை வங்கியில் திருச்சி தென்னூரில் வசிக்கும் கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடியைச் சோ்ந்த கு. வசந்தராஜ் (32) என்பவரின் வங்கிக் கணக்கு மூலம் கடந்த 2024 மே மாதம் அடகு வைத்தாா்.

இதையடுத்து அந்த நகைகளை மீட்க செந்தில்குமாா் வட்டியுடன் ரூ. 43 ஆயிரத்தை வசந்தராஜிடம் கடந்த 2025 மே மாதம் கொடுத்த நிலையில், பணத்தைப் பெற்றுக்கொண்ட வசந்தராஜ் நகைகளை மீட்டுத் தராமல் கடந்த ஓராண்டாக ஏமாற்றி வந்தாா்.

இதுகுறித்து செந்தில்குமாரின் மனைவி சுமதி கண்டோன்மென்ட் காவல் நிலையத்தில் கடந்த பிப்ரவரி 24-ஆம் தேதி அளித்த புகாரின்பேரில், வழக்குப் பதிந்த போலீஸாா், தலைமறைவாக இருந்த வசந்தராஜை புதன்கிழமை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி மத்திய சிறையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.